பதிவு செய்த நாள்
04 மே2018
00:43
சென்னை:இஞ்சி விலை சில்லரை விற்பனையில், 1 கிலோ, 100 ரூபாயானது.சென்னை, கொத்தவால்சாவடி காய்கறி விற்பனை சந்தையில், நேற்று இஞ்சி, 1 கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக, 30 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை உயர்ந்து வந்த இஞ்சி, நேற்று சதமடித்தது.
தக்காளி விலை குறைந்து, 1 கிலோ 8 – 10 ரூபாய்க்கு விற்பனையானது. கத்திரி, வெண்டைக்காய், கோவக்காய், கொத்தவரை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் 10 – 20 ரூபாய்க்கு விற்பனையாகின.வெங்காயம், 25 ரூபாய்க்கும், உருளை, 25 – 30 ரூபாய்க்கும் விற்பனையாகின. வாழைக்காய் ஒன்றின் விலை, 7 – 10 ரூபாய் வரை விற்பனையானது.
ஆரோக்கிய உணவு
இன்று முதல் அக்னி வெயில் கொளுத்த துவங்க உள்ள நிலையில், உணவு தானிய விற்பனை சந்தையில் கேழ்வரகு, சாமை போன்ற உணவு தானியங்கள் விற்பனைக்கு அதிகளவு வந்துள்ளன.இதில், சில்லரை விற்பனையில் குதிரைவாலி, சாமை உள்ளிட்டவை, 1 கிலோ, 70 ரூபாயாகவும், தினை, 45 ரூபாயாகவும், சிவப்பரிசி, 50 ரூபாயாகவும், கேழ்வரகு, 1 கிலோ 20 – 25 ரூபாயாகவும் விற்கப்படுகின்றன.
மலர் விலை நிலவரம்
பாரிமுனை, பந்தர் தெரு மலர் விற்பனை சந்தையில், அதிகபட்சமாக கனகாம்பரம், 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. மல்லி, 1 கிலோ, 120 – 150 ரூபாய் வரை விற்கப்பட்டது.பட்டன் ரோஜா, 1 கிலோ, 100 – 120 ரூபாய் வரையிலும், பன்னீர் ரோஜா, 1 கிலோ, 80 – 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. சாமந்தி வரத்து குறைந்து காணப்பட்டது.இதன் விலை, 1 கிலோ, 140 ரூபாயாக இருந்தது. ஒரு பூ, 10 ரூபாய்க்கு விற்ற தாமரை, வரத்து அதிகரிப்பு காரணமாக, 3 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|