பதிவு செய்த நாள்
04 மே2018
00:44
சென்னை:மீன்பிடி தடை எதிரொலியாக, கருவாட்டு வகைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுஉள்ளது.சென்னையில் கருவாட்டு விற்பனை சந்தைக்கு பெயர் பெற்ற மூலக்கொத்தளத்தில், கருவாட்டு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.மீன்பிடி தடை எதிரொலியாக கருவாட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறும் வியாபாரிகள், வஞ்சிரம், 1 கிலோ, 800 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாக கூறினர்.இது குறித்து, கருவாட்டு வியாபாரிகள் கூறியதாவது:மீன்பிடி தடை காரணமாக வஞ்சிரம், இறால் வகை விலை உயர்ந்துள்ளன. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து கருவாட்டு வகைகளை இறக்குமதி செய்கிறோம்.தற்போது, தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், வஞ்சிரம், 1 கிலோ அதிகபட்சமாக, 800 – 1,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. காய்ந்த இறால் கிலோ, 400 ரூபாயாகவும், நெத்திலி, 400 – 600 ரூபாயாகவும், வாளை கருவாடு, 160 – 200 ரூபாயாகவும், இறால் 400 ரூபாயாகவும் உள்ளன. மாசி கருவாடு, 1 கிலோ, 720 ரூபாயாக உள்ளது. விலை குறைவாக காரப்பொடி கருவாடு கிலோ, 50 ரூபாயாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பழநி பகுதியில் புளிய மரங்களில் விளைச்சல் குறைவால், மார்க்கெட்டில் புளியின் விலை அதிகரித்துள்ளது. பழநி சாலையோரங்கள், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன.இவற்றில் ஜனவரி – மே வரை புளிய மரங்களில் விளைச்சல் இருக்கும். இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|