பதிவு செய்த நாள்
05 மே2018
00:47
சென்னை: கோயம்பேடு சந்தையில், காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது.கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி, 8 – 10 ரூபாய்க்கு விற்பனையானது. குறைந்தபட்சமாக முட்டைகோஸ், 5 ரூபாய்க்கும், கோவக்காய், சுரக்காய், பூசணி உள்ளிட்டவை, 8 – 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. வெங்காயம், 18 –- 22 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதிகபட்சமாக பட்டாணி, 1 கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனையானது. பீட்ரூட், நுால்கோல், வெள்ளரி, முள்ளங்கி, கத்திரி, புடலங்காய், சவ்சவ் உள்ளிட்டவை, 1 கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டன.கேரட், 1 கிலோ, 25 ரூபாயாக இருந்தது. வெண்டைக்காய், அவரைக்காய், 15 – 20 ரூபாய் வரை இருந்தன. இஞ்சி விலை முந்தைய நாளோடு ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது, மொத்த விலையில் இஞ்சி நேற்று, 45 ரூபாய்க்கு விற்பனையானது.
செண்டு, அரளி வருகை
கோயம்பேடு மலர் சந்தையில், மல்லி, 1 கிலோ, 150 – 200 ரூபாய் வரை விற்பனையானது. கனகாம்பரம் நேற்று முன்தினம் போலவே, 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செண்டு, அரளி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் வரத்து துவங்கியுள்ளன; இதன் விலை, 1 கிலோ, 50 ரூபாயாக இருந்தன. ரோஜா வகைகள், 1 கிலோ, 80 –- 100 ரூபாய்க்கு விற்பனையாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|