பதிவு செய்த நாள்
07 மே2018
00:35
ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை பாதுகாப்பிற்கானது. எனினும் வரி சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட பலன்களையும் பாலிசிகள் அளிக்கின்றன. எனவே விற்பனையாளர்கள் காப்பீடு பாலிசிகளை பரிந்துரைக்கும் போது, வாடிக்கையாளர்களை கவர, பலவித உத்திகளை பயன்படுத்துகின்றனர். தேவைக்கேற்ற சரியான பாலிசியை தேர்வு செய்ய இந்த உத்திகளை கண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும்.
‘யூலிப்’கள் தரும் பலன்
யூலிப்கள் முதலீடு அம்சமும் கொண்ட பாலிசிகளாக இருக்கின்றன. ஆனால் யூலிப்கள் நிலையான பலன் அளிக்கலாம் அல்லது எந்தவித பாதகமும் இல்லாதவை என, பல விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. யூலிப்கள், பங்குச்சந்தையுடன் தொடர்பு கொண்டவை என்பதால், அவற்றின் பலன் சந்தை போக்கிற்கு ஏற்பவே அமையும்.
3 ஆண்டு போதும்
தொடர்ந்து பாலிசி தொகை செலுத்த முடியாது என கூறும் போது, 3 ஆண்டுகள் மட்டும் செலுத்தினால் போதும் வாழ்நாள் பாதுகாப்பு பெறலாம் என சொல்லப் படலாம்.ஆனால் அதிக தொகை கொண்ட ஒற்றை பிரீமியம் பாலிசிகள் தவிர, வேறு எந்த பாலிசியையும் தொடர்ந்து செலுத்தி வந்தால் மட்டுமே பலன் பெற முடியும்.
மலிவான பாலிசி
காப்பீடு பாதுகாப்பு மட்டுமே அளிக்கும், ‘டெர்ம்’ பாதுகாப்பு பாலிசிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. டெர்ம் காப்பீடுகள் மலிவானதாகவும் அமைகின்றன. ஆனால், என்டோமென்ட் பாலிசி திட்டங்கள் டெர்ம் பாலிசியை விட மலிவானவை என சொல்லப்பட்டால், அது சாத்தியமில்லை.
ஒரு பாலிசி போதும்
வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளை பெற்றிருக்கும் போது, புதிய பாலிசி வாங்க தயக்கம் காட்டுவர். எனவே, 3 இன் 1 அல்லது 4 இன் 1 பலன் அளிக்கும் பாலிசிகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த பலன்கள் தேவையான பலன் தானா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நிச்சய பலன்
முதலீடு அம்சங்கள் கொண்ட காப்பீடு பாலிசிகளும் இருக்கின்றன என்றாலும் அவை தொடர்பாக, 10 முதல், 12 நிச்சய பலன் உறுதி அளிக்கப்பட்டால் அதை நம்ப வேண்டாம். பலன் உண்டு என்றாலும், அவற்றின் அளவு குறித்து நிச்சயமான உறுதி அளிக்க முடியாது. தேவை அடிப்படையிலேயே பாலிசி வாங்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|