பதிவு செய்த நாள்
10 மே2018
00:23
சென்னை:கோயம்பேடு மலர் சந்தையில், ஆந்திரா, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகளவில் மல்லி கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக வேன் மூலமும், தனி நபர் வாயிலாகவும் மூட்டை மூட்டையாக குவிந்த மல்லியால், விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த விலையில், 1 கிலோ மல்லி, 50 ரூபாய்க்கு குறைந்துள்ளது. சில்லரை விலையில், 90 – 120 ரூபாயாக உள்ளது.
அதே போல் முல்லையும் மொத்த விலையில், 60 ரூபாயாகி விட்டது. சில்லரை விலையில், 120 ரூபாயாக விற்கப்படுகிறது. ரோஜா வகைகள் மொத்த விலையில், 1 கிலோ, 30 ரூபாயாக உள்ளது. சில்லரையில், 60 – 100 ரூபாயாக உள்ளது.
சம்பங்கி, சில்லரை விலையில், 50 ரூபாயாக உள்ளது. கருங்குவளை, 100 கிராம், 10 ரூபாயாக உள்ளது. கனகாம்பரம் மொத்த விலையில், 1 கிலோ, 150 ரூபாயாக உள்ளது. சில்லரையில், 200 – 300 ரூபாயாக உள்ளது. சாமந்தி வரத்து இல்லை.
காய்கறி வரத்து
காய்கறி வகைகளில் வரத்து குறைந்து இருந்தாலும் நுகர்வு இல்லாததால், விலை குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக பட்டாணி விலை, 1 கிலோ, 90 ரூபாயாக உள்ளது. பீன்ஸ், 1 கிலோ, 40 – 50 ரூபாயாக உள்ளது. சாம்பார் வெங்காயம், 30 – 35 ரூபாயாகவும், பெல்லாரி வெங்காயம், 15 ரூபாயாகவும் உள்ளது.
வெண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்டவை, 1 கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கொத்தவரை, சேப்பங்கிழங்கு, பீட்ரூட், சவ்சவ், நுால்கோல், புடலங்காய், 15 – 20 ரூபாயாகவும், முருங்கைக்காய், 15 – 20 ரூபாய், தக்காளி, 10 ரூபாயாக விற்கப்பட்டது. இஞ்சி, 1 கிலோ, 45 ரூபாயாக இருந்தது.
காய்கறி விலை குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் ஆலோசகர் சவுந்திரராசன் கூறியதாவது:சென்னையில் கோடை விடுமுறை காரணமாக நிறைய பேர் ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் காய்கறி நுகர்வு குறைந்து விட்டது. வரத்தும் குறைந்தே உள்ளது. இதனால் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. கோடைக்காலத்தில் நீர்சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை சாப்பிடுவது நல்லது. அதற்கேற்ற வகையிலான காய்கறிகள் விலை குறைவாகவே விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பழங்கள்
பழவகைகளில் திராட்சை வரத்து குறைந்து விட்டது. சாத்துக்குடி, மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சாத்துக்குடி, 1 கிலோ, 60 – 80 ரூபாயாக உள்ளது. மாம்பழத்தில் பங்கனப்பள்ளி ஒரு கிலோ, 60 ரூபாயில் இருந்து விற்பனைக்கு வந்து உள்ளது.பைனாப்பிள், 1 கிலோ, 45 ரூபாயாகவும், மாதுளை, 80 – 100 ரூபாயாகவும், கிர்ணிப்பழம் மொத்த விலையில், 15 – 18 ரூபாயாகவும், சில்லரையில், 25 ரூபாயாகவும் உள்ளது.
வாஷிங்டன் ஆப்பிள், 1 கிலோ, 160 ரூபாயாக உள்ளது. எலுமிச்சை, 1 கிலோ, 150 – 200 ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|