பதிவு செய்த நாள்
10 மே2018
00:24
புதுடில்லி:இந்தாண்டின் முதல் காலாண்டில், குறு,சிறு நடுத்தர நிறுவனங்களிடம், வர்த்தக வளர்ச்சி குறித்த நம்பிக்கை அதிகரித்திருப்பது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
‘சிட்பி’ எனப்படும், சிறுதொழில் மேம்பாட்டு வங்கி, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ ஆகியவை இணைந்து, இந்தியாவில், முதன் முறையாக, குறு,சிறு தொழில் நிறுவனங்களின் வர்த்தக நம்பிக்கை குறித்த ஆய்வை துவக்கியுள்ளன.
இதன்படி, தயாரிப்பு துறையில் ஐந்து பிரிவுகள்; சேவை துறையில் மூன்று பிரிவுகள் என, எட்டு பிரிவுகளில் ஆய்வு நடத்தி, ‘கிறிசிட்எக்ஸ்’ என்ற குறியீடு வெளியிடப்படுகிறது.இந்தவகையில், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், குறு,சிறு தொழில் நிறுவனங்களின், வர்த்தக வளர்ச்சி நம்பிக்கையை குறிக்கும்,‘கிரிசிட்எக்ஸ்’ குறியீடு, 121 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில், 107 புள்ளிகளாக இருந்தது.
தயாரிப்பு பிரிவில், ரசாயனம், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளில், நம்பிக்கை அதிகரித்துள்ளது. இப்பிரிவு நிறுவனங்கள், ‘நடப்பு ஏப்., – ஜூன் காலாண்டில் வர்த்தகம் நன்கு இருக்கும்’ என, கூறியுள்ளன.
அதேசமயம், தோல் மற்றும் தோல் பொருட்கள்; நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில், நம்பிக்கை குறைந்து உள்ளது.இதேகாலத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சேவை நிறுவனங்களும், அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஆனால், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த குறு,சிறு நிறுவனங்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|