பதிவு செய்த நாள்
11 மே2018
00:48
புதுடில்லி:‘வெளியில் இருந்து, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, வழங்கும் உணவு சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும்’ என, கர்நாடகாவின் ஏ.ஏ.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, உணவு சேவை நிறுவனத்தின் மனுவை விசாரித்து அளித்த தீர்ப்பு:மனுதாரர், சிறப்பு பொருளாதார மண்டல வரம்புக்கு வெளியே, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளை வழங்குகிறார். இச்சேவைகளை, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெறுகின்றனர்.
ஆகவே, மனுதாரர் அளிக்கும் சேவைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பதாக கருத முடியாது. கர்நாடக மாநிலத்திற்குள் அளிக்கும் சேவையாகவே கருத வேண்டும். எனவே, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய வரி நடைமுறையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில், அதிகாரபூர்வ செயல்பாடுகளுக்காக வரையறுத்த பகுதியில் வழங்கும் சேவைக்கு, பூஜ்ய வரி விதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|