பதிவு செய்த நாள்
11 மே2018
00:51
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் அடுத்த, 4 - 5 ஆண்டுகளில், 50 சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர், கிரிஷ் அய்யர் கூறியதாவது:தற்போது நிறுவனத்திற்கு, 21 சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இந்நிலையில் அடுத்த, 4 - 5 ஆண்டுகளில், 50 சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளோம்; அதற்கான பணிகள், வேகமாக நடக்கின்றன.
நடப்பாண்டில், ஐந்து சில்லரை விற்பனை கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம். அதற்கடுத்த ஆண்டுகளில், தலா, 12 - 15 சில்லரை விற்பனை கடைகள் வீதம் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்கும், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|