50 சில்லரை விற்பனை கடைகள் இந்தியாவில் திறக்கிறது, 'வால்மார்ட்'50 சில்லரை விற்பனை கடைகள் இந்தியாவில் திறக்கிறது, 'வால்மார்ட்' ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.11 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.11 ...
‘செபி’ புதிய விதிமுறைகள் வெளியீடு தலைவர், நிர்வாக இயக்குனர் பதவிகள் பிரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2018
00:54

புதுடில்லி:‘நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர் குழு­வில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­களை ஒரு­வரே வகிக்­கக் கூடாது; தனித் தனி­யாக பிரிக்க வேண்­டும்’ என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ தெரி­வித்­துள்­ளது.
‘உதய் கோட்­டக்’ குழு அளித்­துள்ள பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில், நிறு­வ­னங்­க­ளுக்­கான புதிய விதி­மு­றை­களை செபி வெளி­யிட்­டுள்­ளது. அதன் விப­ரம்:
* பங்­குச் சந்தை பட்­டி­ய­லில், முன்­ன­ணி­யில் உள்ள, 1,000 நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர் குழு­வில், ஒரு பெண் உட்­பட, குறைந்­த­பட்­சம், ஆறு தனி இயக்­கு­னர்­கள் நிய­மிக்­கப்­பட வேண்­டும். தனி இயக்­கு­னர்­கள் நிய­ம­னம், 2019, ஏப்., 1 முதல் நடை­மு­றைக்கு வரும்
* இயக்­கு­னர் குழு­வில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­களை பிரிக்க வேண்­டும். இரு பத­வி­களில், தனித்­தனி நபர்­களை நிய­மிக்க வேண்­டும். 2020, ஏப்., 1க்குள் இந்த விதி­முறை பின்­பற்­றப்­பட வேண்­டும்
* 100 முன்­னணி நிறு­வ­னங்­கள், அவற்­றின் ஆண்டு பொதுக்­குழு நிகழ்ச்­சி­களை, கட்­டா­யம் வலை­த­ளத்­தில் வெளி­யிட வேண்­டும்
* ஒரு­வர், எட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு மேல், இயக்­கு­னர் பதவி வகிக்­கவோ அல்­லது தனி இயக்­கு­ன­ரா­கவோ செயல்­ப­டக் கூடாது
* ஒரு நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர் குழு­மத்­தைச் சேர்ந்த, தனி நபர் அல்­லது நிறு­வ­னம், குறைந்­த­பட்­சம், 20 சத­வீத பங்­கு­களை வைத்­தி­ருந்­தால், அது, உறவு முறை­யாக கரு­தப்­படும்
* அத்­த­கை­யோ­ருக்கு, நிறு­வ­னத்­தின் விற்­று­மு­த­லில், 2 சத­வீ­தத்­திற்கு மேல், ‘ராயல்டி’ அல்­லது ‘பிராண்டு’ பயன்­பாட்டு தொகை வழங்­கு­வ­தற்கு, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஒப்­பு­தல் அவ­சி­யம்
* தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்­தும், உரி­மைப் பங்­கு­கள் மூல­மா­க­வும் திரட்­டும் நிதி, எவற்­றுக்­காக செல­வி­டப்­பட்­டது என்ற விப­ரத்தை நிறு­வ­னங்­கள் வெளி­யிட வேண்­டும்
* நிறு­வ­னங்­கள், அவற்­றின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்­யும் நிறு­வ­னங்­க­ளின் விப­ரங்­கள், தணிக்­கைக்கு வழங்­கப்­பட்ட கட்­ட­ணம் உள்­ளிட்ட விப­ரங்­களை தெரி­விக்க வேண்­டும்
* கணக்கு தணிக்­கை­யில் இருந்து ஒரு நிறு­வ­னமோ அல்­லது பட்­டய கணக்­கா­ளரோ வில­கி­னால், அதற்­கான கார­ணங்­களை, நிறு­வ­னம் வெளி­யிட வேண்­டும்
* முன்­ன­ணி­யில் உள்ள, 100 நிறு­வ­னங்­கள், நிதி­யாண்டு முடிந்த, ஐந்து மாதங்­க­ளுக்­குள், ஆண்டு பொதுக்­குழு கூட்­டத்தை கூட்ட வேண்­டும்
* அனைத்து செயல் சாரா இயக்­கு­னர்­க­ளின் மொத்த ஊதி­யத்­திற்கு நிக­ராக, செயல்­சாரா இயக்­கு­னர் ஒரு­வ­ருக்கு ஊதி­யம் வழங்க வேண்­டு­மென்­றால், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஒப்­பு­தல் வேண்­டும்
* நிறு­வ­னத்­தின் நிகர லாபத்­தில், 2.5 சத­வீ­தம் அல்­லது ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செயல் நிறு­வ­னர் இயக்­கு­னர்­க­ளுக்கு ஊதி­யம் அளிப்­ப­தாக இருந்­தால், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஒப்­பு­தல் தேவை
* 75 வய­திற்கு மேற்­பட்­டோரை, செயல் சாரா இயக்­கு­ன­ராக நிய­மிக்க, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அனு­மதி பெறு­வது அவ­சி­யம்
* முன்­ன­ணி­யில் உள்ள, 500 நிறு­வ­னங்­கள், கணினி பாது­காப்பை பலப்­ப­டுத்த, இடர்ப்­பாட்டு மேலாண்மை குழுவை அமைக்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்த விதி­மு­றை­களில், பெரும்­பா­லா­னவை, அடுத்த ஆண்டு, ஏப்­ரல் 1ல் அம­லா­கும். இதர விதி­மு­றை­கள், 2020 ஏப்., 1ல் நடை­மு­றைக்கு வரும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)