பதிவு செய்த நாள்
12 மே2018
00:17
புதுடில்லி:‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை, ‘வால்மார்ட்’ நிறுவனத்திற்கு விற்றுவிட்டு வெளியேற, ‘சாப்ட்பேங்க்’ தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த, சாப்ட்பேங்க், பிளிப்கார்ட் நிறுவனத்தில், 250 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில், 77 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக, வால்மார்ட் அறிவித்துள்ளது. இதில், சாப்ட்பேங்கின், 22 சதவீத பங்குகளும் அடங்கும்.இந்த பங்கு விற்பனையில், சாப்ட்பேங்கிற்கு, 450 கோடி டாலர் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லாபத் தொகையான, 200 கோடி டாலருக்கு, 20 சதவீத மூலதன ஆதாய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
இதனால், லாபம் குறையும் என்பதால், வால்மார்ட்டுக்கு பங்குகளை விற்க, சாப்ட்பேங்க் தயங்குவதாக கூறப்படுகிறது. எனினும், ஒரு வாரத்தில், தன் முடிவை அறிவிப்பதாக, சாப்ட்பேங்க் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|