பதிவு செய்த நாள்
12 மே2018
00:19
சென்னை:வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள வீட்டு உபயோக அரவை இயந்திரம், சென்னையிலும் பிரபலமடைந்து வருகிறது.
உலர்ந்த அரிசி, கோதுமை, மிளகாய், நவதானியங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை அரைக்கும் இந்த இயந்திரத்தின் தேவை, சென்னையிலும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் அரவை இயந்திர நிலையங்கள், மின் கட்டணம் மற்றும் அதிகப்படியான வாடகை போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன. இவ்வகை அரவை இயந்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு மட்டுமின்றி, சிறு தொழில் நடத்தும் பெண்களுக்கும் உபயோகமாக உள்ளதால், விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 13 ஆயிரம் முதல், அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள இதன் வகைகளை, சென்னையில் விற்பனை செய்யும் யாஷ்லால்வானி கூறியதாவது:
தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கிரைண்டர், மிக்ஸி உள்ளது போல், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், வீட்டுக்கு வீடு இந்த மல்டி பர்பஸ் அரவை இயந்திரம் இருக்கும்.தற்போது, சென்னையிலும் இதன் தேவை அதிகரித்துள்ளது. குறைந்த செலவில், வீட்டிலேயே சுத்தமாக அரைக்கும் என்பதாலும், இதன் பராமரிப்பு செலவும் குறைவு என்பதாலும், மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.இதில், ஒரு ரூபாய் மின்சார செலவில், 5 கிலோ மாவை நாமே அரைத்துக் கொள்ளலாம். இதில் அரிசி, கோதுமை, நவதானியங்கள், மிளகாய், தனியா, மஞ்சள் என உலர்ந்த உணவு வகைகள் அனைத்தையும் அரைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|