ஆடம்பர பொருட்கள் சந்தை ரூ.2 லட்சம் கோடியாகும்ஆடம்பர பொருட்கள் சந்தை ரூ.2 லட்சம் கோடியாகும் ... தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை ...
ஆபரணங்கள் துறை வளர்ச்சிக்கு உதவுங்க! வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
00:33

மும்பை:''வங்­கி­கள், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறையை நன்கு புரிந்து கொண்டு, அதன் வளர்ச்­சிக்கு, கடன் வழங்க வேண்­டும்,'' என, மத்­திய தொழில்­துறை அமைச்­சர் சுரேஷ் பிரபு வலி­யு­றுத்­தி­உள்­ளார்.
அவர், மும்­பை­யில், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­தில், மேலும் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வில், மிகப் பெரிய வேலை­வாய்ப்­பு­களை ஆப­ர­ணங்­கள் மற்­றும் நவ­ரத்­தி­னங்­கள் துறை வழங்­கு­கிறது. ஆகவே, இத்­து­றை­யின் செயல்­பா­டு­களை சரி­வர புரிந்து கொண்டு, நிதிச் சேவை­களை வழங்­கும் வங்கி நடை­முறை தான் நமக்கு தேவை.
ஒரு துறையை பற்றி நன்கு புரிந்து கொள்­ளா­மல் அல்­லது தகு­தி­யற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்கி, தேவை­யற்ற இடர்ப்­பா­டு­களை, வங்­கி­கள் சந்­திக்க கூடாது.
நோக்கம்
எந்­த­வொரு வர்த்­த­க­மாக இருந்­தா­லும், நியா­ய­மற்ற முறை­யில் நடை­பெ­றும் வங்­கிச் சேவை­க­ளுக்கு, அரசு ஆத­ர­வ­ளிக்­காது.உண்­மை­யாக தொழில் புரி­வோ­ருக்­கும், அதிக நம்­ப­கத்­தன்மை கொண்ட நிறு­வ­னங்­க­ளுக்­கும், இடர்ப்­பாட்­டை­யும் சமா­ளிக்­கும் திறன் கொண்ட வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்­கும் வங்­கி­கள் கடன் வழங்க வேண்­டும் என்­பதே அர­சின் நோக்­கம்.
அத­னால், வங்­கி­கள் நிதி­யு­தவி அளிக்­கும்­போது, குறிப்­பிட்ட துறை­யின் செயல்­பா­டு­களை முழு­மை­யாக புரிந்து கொண்டு, அவற்­றின் நிதி நடை­மு­றை­களை அமைத்­துக் கொள்ள வேண்­டும்.இந்­த ­வ­கை­யில், அதிக வேலை­வாய்ப்­பு­களை வழங்­கும் நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை வளர்ச்­சிக்கு, வங்­கி­கள் ஆத­ர­வ­ளிக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் பேசி­னார்.
வைர வியா­பா­ரி­கள் நிரவ் மோடி, மெகுல்­சோக்சி ஆகி­யோர், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், 13ஆயி­ரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளி­நாட்­டுக்கு தப்­பிச் சென்­றுள்­ள­னர்.இந்த மோசடி, வங்­கி­கள் வழங்­கும், ‘எல்.ஓ.யு.,’ எனப்­படும் கடன் பொறுப்­பேற்பு ஆவ­ணங்­கள் மூலம் நடை­பெற்­றது தெரி­ய­வந்­த­ததை அடுத்து, இவ்­வகை ஆவண நடை­மு­றையை, ரிசர்வ் வங்கி ரத்து செய்­துள்­ளது.
பாதிப்பு
இத்­து­டன், ‘எல்.ஓ.சி.,’ எனப்­படும் மூன்­றாம் நபர் கடன் பொறுப்­பேற்பு ஆவண நடை­மு­றை­யும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.இத­னால், இத்­த­கைய நடை­மு­றை­களின் கீழ், குறைந்த வட்­டி­யில் கடன் பெற்று வந்த ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­டு உள்­ள­னர்.அதிக வட்­டி செல­வி­னம், திரும்ப அளிக்­கப்­படும் வரியை பெறு­வ­தில் தாம­தம் போன்ற, இடர்ப்­பா­டு­களை சந்­தித்­துள்­ள­னர்.
இந்த பிரச்­னை­கள் குறித்து, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி கூட்­ட­மைப்பு, மத்­திய வர்த்­தக அமைச்­சர் சுரேஷ் பிர­பு­வி­டம் வெள்ளை அறிக்கை வழங்­கி­யுள்­ளது.அதில், கடன் பெறும் ஆவண நடை­மு­றைக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடையை நீக்க வேண்­டும்; விற்­று­மு­தல் சார்ந்த வங்கி நிதி­யு­தவி திட்­டத்தை மீண்­டும் அமல்­ப­டுத்த வேண்­டும் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ளன.
ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த, 2004 – -05ம் நிதி­யாண்­டில், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறை­யின் நிகர ஏற்­று­மதி, 1,566 கோடி டால­ராக இருந்­தது. இது, 2016-– 17ல், 3,559 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. ஏற்­று­ம­தி­யில், அமெ­ரிக்கா, ஹாங்­காங், ஐக்­கிய அரபு எமி­ரேட் ஆகிய நாடு­களின் பங்­க­ளிப்பு, 75 சத­வீ­த­மாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)