பதிவு செய்த நாள்
13 மே2018
00:04
புதுடில்லி:‘வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அஞ்சல் அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்’ என, மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
கடந்த, 2016 முதல், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், வலைதளங்களில் விற்கப்படும் பொருட்கள், சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள, வெளிநாட்டு அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இனி, அனைத்து வெளிநாட்டு அஞ்சல் அலுவலகங்களில், எம்.இ.ஐ.எஸ்., திட்ட சலுகைகள் இல்லாமலும், வலைதள விற்பனை பொருட்களின் ஏற்றுமதியை அனுமதிப்பது குறித்தும், பரிசீலிக்கப்படுகிறது.
அஞ்சலகங்கள் வாயிலான ஏற்றுமதி நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கோரி வருகின்றன.இது தொடர்பான நடவடிக்கைகளை, சுங்கத் துறையும், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.சிறிய, நடுத்தர நிறுவனங்கள், வலைதளம் வாயிலாக சர்வதேச சந்தையில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|