பதிவு செய்த நாள்
14 மே2018
00:21
இளம் ஊழியர்களில் பெரும்பாலானோர், அதிக ஊதியத்திற்காக பணி மாற தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வேலை வாய்ப்பு தேடியந்திரமான இண்டீட், ஊழியர்கள் மத்தியில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.அதில், 25 முதல் 34 வயது வரை உள்ள இளம் ஊழியர்களில்83 சதவீதம் பேர் அதிக ஊதியத்தை நாடி பணி மாற தயாராக இருப்பதாக தெரிய வந்து உள்ளது.
ஊழியர்களில், 60 சதவீதத்தினர் தற்போதுள்ளதை விட, வளைந்து கொடுக்ககூடிய வேலை நேரத்திற்காக பணிமாற விருப்பம் கொண்டுள்ளனர். ஆண் ஊழியர்களில், 64 சதவீதம், பெண்ஊழியர்களில், 67 சதவீதம் பேர் இந்த ஆண்டு ஊதிய உயர்வுகேட்க இருப்பதாக தெரிவித்துஉள்ளனர்.மேலும், 50 சதவீதம் பேர், ஊதிய உயர்வு கேட்பதற்கான காரணமாக, பணியில் தங்கள் செயல் திறனை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|