பதிவு செய்த நாள்
15 மே2018
02:36
சென்னை:காய்கறி விற்பனையில், பட்டாணி விலை, 1 கிலோ, 100 ரூபாயை தொட்டது.கோயம்பேடு காய்கறி சந்தையில், மொத்த விலையில், 1 கிலோ பட்டாணி விலை, 100 ரூபாயை தொட்டது. நேற்று முன்தினம், 70 ரூபாய்க்கு விற்பனையான இஞ்சி, நேற்று, 50 ரூபாயாக இறங்கியது.பச்சை மிளகாய், 1 கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. பீன்ஸ், 45 ரூபாய்க்கும், அவரைக்காய், 35 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு, 30 ரூபாய்க்கும், கேரட், வெண்டைக்காய், காலிபிளவர் உள்ளிட்டவை, 25 ரூபாய்க்கும் விற்பனை ஆகின.
நுால்கோல், சவ்சவ், கோவைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், புடலங்காய் உள்ளிட்டவை, 1 கிலோ, 20 ரூபாயாக இருந்தன. முட்டைகோஸ், 8 – 10 ரூபாய்க்கு விற்பனையானது. சாம்பார் வெங்காயம், 1 கிலோ, 35 ரூபாயாக இருந்தது. பெல்லாரி வெங்காயம், தக்காளி, பீட்ரூட், கத்திரிக்காய், முள்ளங்கி, 15 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு, 28 ரூபாய்க்கும் விற்பனையாகின.
கோயம்பேடு காய்கறி விற்பனையாளர் சங்க ஆலோசகர், சவுந்தரராசன் கூறியதாவது:வரத்தும் விற்பனையும், சில வாரங்களாக ஒரே மாதிரியாகவே உள்ளது. பட்டாணி, இஞ்சி உள்ளிட்டவை மட்டுமே, ஏற்ற இறக்கமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|