பதிவு செய்த நாள்
15 மே2018
02:45
நாமக்கல்;நாள்தோறும் முட்டை உற்பத்தி சரிவு, வெளிமண்டலங்களில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நாமக்கல் மண்டலத்தில், கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்) நிர்ணயம் செய்யும் விலைக்கே, முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. 28ம் தேதி, 340 காசு; நேற்று, 380 காசு என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:நாமக்கல் மண்டலத்தில், வெயில் தாக்கம் மற்றும் முட்டைக் கோழி விலை உயர்வால், நாள்தோறும், 50 லட்சம் முட்டை உற்பத்தி சரிந்து வருகிறது. இந்நிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிப்பு, வெளிமண்டலங்களில் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், இங்கு விலை உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே துவங்க உள்ளதால், முட்டை கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|