பதிவு செய்த நாள்
16 மே2018
00:37
சிவகாசி:மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிவகாசியில் தயாராகும் பாட நோட்டுகளின் விலை, 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பாட நோட்டுகள் தயார் செய்யும் பணி, சிவகாசியில் 25க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.இங்கிருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நோட்டு தயாரிக்கும் வெள்ளை தாள், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.வெள்ளை காகிதம் டன்னிற்கு,5 முதல் 8 சதவீதம், அட்டை, 10 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளன.
இதனால் நோட்டுகளின் விலை, கடந்தாண்டை விட, 10 சதவீதம் உயர்ந்து உள்ளது.
சிவகாசியில் தயாரிக்கப்படும் நோட்டுகள் தரமாக இருப்பதால், தனி மவுசு உண்டு. கடந்தாண்டு கடும் பேப்பர் தட்டுப்பாடு இருந்தது. இந்தாண்டு ஆர்டர்கள் கணிசமாக வந்துள்ளன. ஜூனுக்குள் முடிக்க வேண்டும் என்பதால், பணிகள் துரிதமாக நடக்கிறது.
மாரிராஜன்
சீமா நோட்புக் தயாரிப்பாளர், சிவகாசி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|