பதிவு செய்த நாள்
16 மே2018
00:50
புதுடில்லி:சர்வதேச முதலீட்டாளர்கள், 2019, பொதுத் தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளதாக, சீனாவைச் சேர்ந்த, யு.பி.எஸ்., செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிறுவனத்தின் இந்திய ஆய்வு பிரிவு தலைவர் கவுதம் சாச்சரியா மற்றும் ஆய்வாளர் சன்ஜனா தாதாவாலா ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:சர்வதேச முதலீட்டாளர்கள் பலருடன் ஆலோசனை நடத்தினோம். அவர்கள், ‘2019 பொது தேர்தலில், மோடி வெல்வார்’ என, நம்பிக்கை தெரிவித்தனர்.
அந்த நம்பிக்கையாலும், பங்குச் சந்தை எழுச்சியுடன் உள்ளதாலும், பங்குகளில் முதலீடு செய்வதாக, அவர்கள் கூறினர்.மத்திய அரசும், பொது தேர்தலை சந்திக்க, கிராமப்புறங்களை குறிவைத்து, பல்வேறு ஊக்கச் சலுகை திட்டங்களை பரிசீலிக்கும் என, தெரிகிறது.உதாரணமாக, மத்திய பிரதேசத்தை பின்பற்றி, விவசாய பொருட்களின் உற்பத்திச் செலவுக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை, அமல்படுத்தலாம்.
விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தலாம். தெலுங்கானாவை போல, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கலாம்.அத்துடன், விவசாயிகளுக்கு, பூஜ்ய வட்டியில் கடன், வட்டி மானியம் உள்ளிட்ட திட்டங்களையும், பரிசீலிக்கலாம்.
பிரதமர் மோடியின், ஆட்சியில், முதல், மூன்றரை ஆண்டுகள், ஏராளமான சீர்திருத்தங்களும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., திவால் சட்டம் போன்ற, கடுமையான அரசியல் நிலைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.அடுத்து, பொது தேர்தல் வர உள்ளதால், இனி இதுபோன்ற பெரிய நடவடிக்கைகள் எதையும், மத்திய அரசு மேற்கொள்ளாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொது தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு எடுக்கும், அரசியல் சார்ந்த பொருளாதார நிலைப்பாடு, நடைமுறைக்கு வந்தாலும் அல்லது பேச்சளவில் நின்றாலும், பங்குச் சந்தை எழுச்சிக்கு உதவும். கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த பங்குகளுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். மத்திய அரசின் கொள்கைகள் வெற்றி பெற்றால், வேலைவாய்ப்புகள் உருவாவது அதிகரிக்கும்.
யு.பி.எஸ்., செக்யூரிட்டீஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|