டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்; நிகர லாபம் ரூ.166 கோடிடி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்; நிகர லாபம் ரூ.166 கோடி ... நுால் ஏற்றுமதி ரூ.885 கோடி அதிகரிப்பு நுால் ஏற்றுமதி ரூ.885 கோடி அதிகரிப்பு ...
ஆயத்த ஆடை ஏற்றுமதி 21.40 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:31

திருப்பூர் : ‘நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 21.40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது’ என, ஏ.இ.பி.சி., தலைவர் தெரிவித்தார்.

திருப்­பூரை அடுத்த பழங்­க­ரை­யில் உள்ள, ஐ.கே.எப்., வளா­கத்­தில், ‘இந்­தியா நிட் – பேர்’ 45வது ஆயத்த ஆடை கண்­காட்­சியை, எம்.பி., சத்­தி­ய­பாமா திறந்து வைத்­தார். ஆயத்த ஆடை ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சில், ஏ.இ.பி.சி., தலை­வர் மஹூ, இந்­தியா நிட் – பேர் அசோ­சி­யே­ஷன் தலை­வர் சக்­தி­வேல், ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் ராஜா சண்­மு­கம், பொதுச்­செ­ய­லர் விஜ­ய­கு­மார், ஏ.டி.டி.சி., தலை­வர் ராகேஷ் வைத் உட்­பட தொழில் துறை­யி­னர் பங்­கேற்­ற­னர்.

ஏ.இ.பி.சி., தலை­வர் மஹூ பேசி­ய­தா­வது: திருப்­பூ­ரில், ஏற்­று­மதி வர்த்­த­கம், 15 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. பல வகை வரி­யி­னங்­களை ஒருங்­கி­ணைத்து, ஜி.எஸ்.டி.,யை கொண்டு வந்­தது, நல்ல முயற்சி. ஆனால், அதை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முறை சரி­யில்லை. டியூட்டி டிரா­பேக், 7.5 சத­வீ­தம், மாநில வரிச் சலுகை, 3.5 சத­வீ­தம், எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தில், 2 சத­வீ­தம் என, மொத்­தம், 13 சத­வீத சலுகை, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்­தது; தற்­போது, 7.70 சத­வீ­த­மாக குறைந்­து­விட்­டது.

உலக வர்த்­தக அமைப்பு, நம் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு நேரடி சலுகை வழங்க எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த சூழ­லி­லும், எம்.இ.ஐ.எஸ்., எனப்­படும் சலுகை, வரும் ஜூன் மாதத்­துக்கு பின்­ன­ரும், 4 சத­வீ­த­மாக தொட­ரும் என வர்த்­தக அமைச்­ச­கம் அறி­வித்­தி­ருப்­பது, மகிழ்ச்சி அளிக்­கிறது. நிதி­யாண்­டின் முதல் மாதத்­தி­லேயே, வர்த்­த­கம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது. 2017- – 18ம் நிதி­யாண்­டின் ஏப்­ரல் மாதம், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி வர்த்­தக மதிப்பு, 11,272.24 கோடி ரூபாய். நடப்பு, 2018 – -19ம் நிதி­யாண்­டின் ஏப்­ரல் மாதம், 8,859.67 கோடி­யாக, 21.40 சத­வீத வீழ்ச்­சியை சந்­தித்­துள்­ளது. வர்த்­த­கம் வளர்ச்சி பெற, அரசு சலுகை மிக­வும் அவ­சி­யம். இவ்­வாறு அவர் பேசி­னார்.

கண்­காட்­சி­யில், பருத்தி மற்­றும் செயற்கை நுாலிழை­களில் தயா­ரிக்­கப்­பட்ட, புதிய வகை டிசைன்­க­ளு­டன் கூடிய ஆடை ரகம், விளை­யாட்டு ஆடை, கிருமி தொற்­றாத ஆடை, வியர்வை உறிஞ்­சும் ஆடை, ‘3டி பிரின்­டிங்’ பொறிக்­கப்­பட்ட ஆடை என, ஏரா­ள­மான ஆயத்த ஆடை­கள் இடம் பெற்­றுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)