வங்கி துறை வாராக்கடன் 32 சதவீதம் அதிகரிப்புவங்கி துறை வாராக்கடன் 32 சதவீதம் அதிகரிப்பு ... 11 மாநிலங்களில் ஜி.எஸ்.டி., வசூல் குறைவு; காரணம் அறிய மத்திய அரசு நடவடிக்கை 11 மாநிலங்களில் ஜி.எஸ்.டி., வசூல் குறைவு; காரணம் அறிய மத்திய அரசு நடவடிக்கை ...
‘பார்டிசிபேட்டரி நோட்’ முதலீடு; ரூ.1 லட்சம் கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:36

புதுடில்லி : அன்­னிய முத­லீட்­டா­ளர்­கள், ‘பார்­டி­சி­பேட்­டரி நோட்’ வாயி­லாக, இந்­திய பங்­குச் சந்­தை­களில் மேற்­கொண்ட முத­லீடு, ஒன்­பது ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, கடந்த ஏப்­ர­லில், ஒரு லட்­சம் கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.

வெளி­நாட்­டி­னர், இந்­திய பங்­குச் சந்­தை­களில், நேர­டி­யாக பதிவு செய்து கொள்­ளா­மல், பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் முத­லீடு செய்ய, பார்­டி­சி­பேட்­டரி நோட் உத­வு­கிறது. இதை, ‘செபி’யிடம் பதிவு செய்த, அன்­னிய முத­லீட்டு மேலாண்மை நிறு­வ­னங்­கள் வழங்­கு­கின்றன. இந்த வகை முத­லீ­டு­களில், கறுப்பு பணம் அதி­க­ள­வில் புழங்­கு­வ­தாக கூறப்­பட்­டதை அடுத்து, கடந்த ஆண்டு, பார்­டி­சி­பேட்­டரி நோட் முத­லீ­டு­கள் தொடர்­பான விதி­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டன.

வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் மற்­றும் அவர்­க­ளுக்கு சொந்­த­மான நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, பார்­டி­சி­பேட்­டரி நோட் வாயி­லாக முத­லீடு செய்ய, செபி தடை விதித்­தது. மேலும், கறுப்பு பண முறை­கே­டு­களை தடுக்க, ஒவ்­வொரு முத­லீட்­டிற்­கும், 1,000 டாலர் கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இது போன்ற கார­ணங்­க­ளால், பார்­டி­சி­பேட்­டரி நோட் வாயி­லான முத­லீடு, 2017 ஜூன் முதல் குறைந்து வரு­கிறது. முந்­தைய, எட்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, செப்­டம்­ப­ரில் முத­லீடு குறைந்­தது.

எனி­னும், அக்­டோ­ப­ரில் உயர்ந்த முத­லீடு, நவம்­பர் முதல், இந்­தாண்டு ஏப்­ரல் வரை தொடர்ந்து குறைந்து வந்­தது. ஏப்­ரல் நில­வ­ரப்­படி, பார்­டி­சி­பேட்­டரி நோட் வாயி­லான முத­லீடு, 1,00,245 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, மார்ச்­சில், 1,06,403 கோடி; பிப்­ர­வ­ரி­யில், 1,06,760 கோடி ரூபாய் என்ற அள­வில் இருந்­தது. இதற்கு முன், 2009ல், பார்­டி­சி­பேட்­டரி நோட் முத­லீடு, 97,885 கோடி ரூபாய் என்ற அள­வில் மிக­வும் குறைந்து இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)