பதிவு செய்த நாள்
18 மே2018
00:43
புதுடில்லி : ‘‘நாட்டின் வளர்ச்சிக்கான, ‘புதிய இந்தியா – 2022’ திட்டம், விரைவில் வெளியிடப்படும்,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த, புதிய இந்தியா –- 2022 திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் பூர்த்தி அடைந்ததும், திட்ட அறிக்கை, அனைத்து மாநில முதல்வர்களிடம் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து விவாதிக்க, அடுத்த மாதம், அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறும்.
உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ஆகவே, இத்துறையை மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், நாடு வேகமான வளர்ச்சியை எட்டும். வழக்கமான, ஐந்தாண்டு திட்டத்திற்கு மாற்றாக, 15 ஆண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்படும். இத்துடன், 2022ம் ஆண்டுக்கான வளர்ச்சி திட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான அதிரடி செயல்பாட்டு திட்டம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு, ‘பிளாக் செயின்’ போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், வேலையிழப்பு ஏற்படும் எனக் கூற முடியாது; மாறாக, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|