இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.87இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.87 ... நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக அதிகரிக்கும் நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக அதிகரிக்கும் ...
சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை ராக்­கெட் வேகத்­தில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
01:30

சென்னை : வெயில் அதி­க­ரிப்பு கார­ண­மாக, சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை, இரு மடங்­காக உயர்ந்­துள்­ளது.

கோயம்­பேடு சந்­தை­யில், மாம்­ப­ழம், சாத்­துக்­குடி பழங்­களின் சீசன் கார­ண­மாக வரத்து அதி­க­ரித்­துள்­ளது. ஆந்­தி­ரா­வில் இருந்து கொண்­டு­வ­ரப்­படும் சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை அதி­க­ரித்­துள்­ள­தாக வியா­பா­ரி­கள் கூறி­னர்.

இது குறித்து, பழ கமி­ஷன் தலை­வர் சீனி­வா­சன் மற்­றும் துணை தலை­வர் குமார் கூறி­ய­தா­வது:வெயில் கார­ண­மாக, சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை இரு மடங்­காக உயர்ந்­துள்­ளது. கடந்­தாண்டு, 1 டன் பழம், 40 ஆயி­ரம் ரூபா­யாக இருந்­தது. அதே பழம் தற்­போது, 82 ஆயி­ரம் ரூபாய் வரை விலை உயர்ந்­துள்­ளது. இவ்­வ­ளவு விலை கொடுத்து கொள்­மு­தல் செய்­தது சென்னை வியா­பா­ரி­கள் தான்.

இரண்டு மற்­றும் மூன்­றாம் தர பழங்­கள், 1 கிலோ, 60 முதல், -80 ரூபாய் வரை கிடைக்­கின்றன. வெயில் சீசன் அதி­க­மாகி உள்­ள­தா­லும், முகூர்த்த சீசன் என்­ப­தா­லும், சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை உயர்ந்­துள்­ளது. ஆனால், விற்­பனை இன்­னும் சூடு­பி­டிக்­க­வில்லை.

ஆந்­தி­ரா­வில் இருந்து, பங்­க­னப்­பள்ளி மாம்­பழ வரத்து அதி­க­ரித்­துள்­ளது. மொத்த விலை­யில், 1 கிலோ, 40 – 50 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. ஹிமா­யத் வகை, 70 – 100 ரூபா­யா­க­வும், கோவா, 50 – 60 ரூபா­யா­க­வும், செந்­துா­ரம், 30 – 50 ரூபா­யா­க­வும் உள்ளன. வியட்­னாம், தாய்­லாந்­தில் இருந்து வரும் டிரா­கன்­பு­ரூட், 22 எண்­ணிக்கை கொண்ட பெட்டி, 650 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. கறுப்பு திராட்சை, நான்கு கிலோ கொண்ட பெட்டி, 240 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

சிலி, வாஷிங்­டன் ஆப்­பிள், 20 கிலோ 2,600 – 2,800 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. சப்­போட்டா, 1 கிலோ, 20 – 40 ரூபா­யா­க­வும்; தர்­பூ­சணி, 15 – 20 ரூபா­யா­க­வும்; பப்­பாளி, 15 – 25 ரூபா­யா­க­வும்; பைனாப்­பிள், 35 – 45 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கின்றன. இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

பச்சை பட்­டாணி விலை அதி­க­ரிப்பு
சென்­னை­யில், பச்சை பட்­டாணி விலை தொடர்ந்து ஏறு­மு­கத்­தில் உள்­ளது.

உள்­ளூர் உணவு தானிய உற்­பத்தி, நிறை­வாக இருப்­ப­தால், பருப்பு வகை­களின் விலை சரா­சரி நிலை­யி­லேயே உள்­ளது. கொத்­த­வால்­சா­வடி உணவு தானிய மொத்த விற்­பனை சந்­தை­யில், பருப்பு வகை­களின் விலை, ஏற்ற இறக்­கம் இல்­லா­மல், சம­நி­லை­யி­லேயே உள்­ளது. கடலை பருப்பு, 1 கிலோ, 46 – 48 ரூபா­யாக உள்­ளது.துவ­ரம் பருப்பு சுமார் ரகம், 1 கிலோ, 48 ரூபா­யா­க­வும், தர­மான பருப்பு, 1 கிலோ, 67 – 69 ரூபா­யா­க­வும் உள்­ளது. உளுந்­தம் பருப்பு, 1 கிலோ, 67 ரூபா­யாக உள்­ளது. இதி­லேயே சுமார் ரகம், 58 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

பச்சை பட்­டாணி விலை மட்­டும் கடந்த சில மாதங்­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில், ஏறு­மு­கத்­தில் உள்­ளது. 48 ரூபாய்க்கு விற்று வந்த பச்சை பட்­டாணி, தற்­போது, 1 கிலோ, 57 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. 35 ரூபாய்க்கு விற்ற, 1 கிலோ வெள்ளை பட்­டாணி, 39 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

அலங்­கார மலர்­கள் விற்­பனை உய­ருமா?
‘திரு­மண அலங்­கா­ரத்­திற்கு பயன்­படும் ரோஜா, ஜப்ரா மலர் வகை­கள் விற்­பனை உய­ர­வில்லை’ என, வியா­பா­ரி­கள் கூறி­னர்.

இது குறித்து, அவர்­கள் மேலும் கூறி­ய­தா­வது: கோயம்­பேடு மலர் சந்­தை­யில், மல்லி வரத்து அதி­க­ரித்­த­தால், மற்ற மலர் வகை­களின் விற்­பனை குறைந்­துள்­ளது. ஆந்­தி­ரா­வில் இருந்து வரும் மல்லி வரத்து தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. தற்­போது மல்லி, 1 கிலோ, 120 – 150 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது.

பெங்­க­ளூரு மற்­றும் ஓசூ­ரி­லி­ருந்து வரும் ரோஜா வகை­களில், சிம்லா ரோஜா மட்­டுமே அதி­க­பட்­ச­மாக, 1 கிலோ, 100 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. பன்­னீர் உள்­ளிட்ட ரோஜா வகை­கள், 60 – 100 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கின்றன. சம்­பங்கி, 50 – 80 ரூபா­யா­க­வும், கன­காம்­ப­ரம், 1 கிலோ அதி­க­பட்­சம், 300 ரூபா­யா­க­வும் விற்­ப­னை­யா­கின்றன. சாமந்தி, 60 – 100 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. வெயில் மற்­றும் வரத்து அதி­க­ரிப்­பால், தாமரை, மொத்த விலை­யில் ஒரு பூ, ஒரு ரூபாய் எனும் அள­வுக்கு குறைந்­துள்­ளது.

அலங்­கா­ரத்­திற்கு பயன்­படும் செண்டு பூ, 1 கிலோ, 50 ரூபா­யாக உள்­ளது. மேலும், திரு­ம­ணம் போன்ற சுப­கா­ரி­யங்­க­ளுக்கு பயன்­படும் ரோஜா, ஜப்ரா, ஆர்கிட் போன்ற மலர் மற்­றும் இலை வகை­கள் விற்­பனை குறைந்­துள்­ளது. இவ்­வாறு அவர்கள் கூறி­னர்.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறி­ய­தா­வது: மலர்­கள் விற்­ப­னை­யும், வரத்­தும் கடந்­தாண்டை விட குறை­வா­கவே உள்­ளது. திரு­ம­ணம் சீசன் துவங்­கி­யுள்­ள­தால், விற்­பனை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்த்­துள்­ளோம். தற்­போது ரோஜா, 1 கட்டு, 130 – 150 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. ஜப்ரா, 1 கட்டு, 30 ரூபாய்க்­கும், ஆர்­கிட் சிங்­கிள், 180 ரூபாய்க்­கும், டபுள், 350 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கின்றன. கார்­னே­ஷன் மலர் வகை, 120 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)