பதிவு செய்த நாள்
19 மே2018
01:34
புதுடில்லி : தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு, ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ படிவத்தில் தாக்கல் செய்வதற்கான, ‘கெடு’ நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் மாத விற்பனை தொடர்பான கணக்கு விபரங்களை, ஜி.எஸ்.டி.ஆர் – 3பி படிவத்தில் தாக்கல் செய்வதற்கு, நாளை கடைசி நாள். ஆனால் பலர், கணக்கு தாக்கல் செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவித்தனர். இந்த குறைபாடுகளை போக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கணினி ஒருங்கிணைப்பு செயல்பாடுகளின் ஆய்வு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி.ஆர் –3பி கணக்கு தாக்கல் செய்வதற்கு மேலும், இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளோர், வரும், 22ம் தேதிக்குள், ஜி.எஸ்.டி.ஆர் – 3பி கணக்கை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரலில், ஜி.எஸ்.டி., மூலம், 1.03 லட்சம் கோடி ரூபாய் வசூலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|