‘ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ தாக்கலுக்கு அவகாசம்‘ஜி.எஸ்.டி.ஆர் – 3பி’ தாக்கலுக்கு அவகாசம் ... கயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடி; மத்திய அமைச்சர் பெருமிதம் கயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடி; மத்திய அமைச்சர் பெருமிதம் ...
நுழைவு தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஜி.எஸ்.டி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
01:35

மும்பை : 'அனைத்து வகை நுழைவு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், 18 சதவீத, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என, வரி ஆலோசனை ஆணையம் தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த, 'சிம்பிள் சுக்லா டுடோரியல்ஸ்' நிறுவனம், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்காக, மாணவர்களை தயார்படுத்தி வருகிறது. இந்நிறுவனம், வரி ஆலோசனை ஆணையத்தின், மஹாராஷ்டிரா பிரிவில், மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், 'கல்வி மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்படுவதை போல, நுழைவு தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சேவைக்கும் விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த, வரி ஆலோசனை ஆணையம் அளித்த தீர்ப்பு: கல்வி மையங்கள், பாடத் திட்டங்களை போதித்து, மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்குகின்றன. ஆனால், நுழைவு தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், அதுபோல எந்தவொரு பிரத்யேக கல்வித் திட்டத்தையும் பயிற்றுவிப்பதில்லை; கல்விச் சான்றிதழும் வழங்குவதில்லை. அதனால், இந்த பயிற்சி மையங்களை, கல்வி மையங்களாக கருத முடியாது. ஆகவே, நுழைவு தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, 18 சதவீத, ஜி.எஸ்.டி., பொருந்தும். அதில், விலக்கு அளிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முந்தைய வரி திட்டத்தில், தனியார் டுடோரியல் நிறுவனங்களுக்கு, 15 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. இது, ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு, தலா, 9 சதவீதம் அளிக்கப்படுகிறது. நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள், மாணவர்களிடம் வசூலிக்கும்,  ஜி.எஸ்.டி.,யில் பெரும் பகுதியை, உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறலாம். அந்த பயனை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதனால், ஜி.எஸ்.டி.,யை காரணம் காட்டி, பயிற்சி கட்டணத்தை உயர்த்தக் கூடாது

-ரஜத் மோகன், 
பங்குதாரர், ஏ.எம்.ஆர்.ஜி., அண்டு அசோசியேட்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)