பதிவு செய்த நாள்
19 மே2018
01:42
திருப்பூர் : ‘‘நாட்டின் கயிறு ஏற்றுமதி, 2,200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தெரிவித்தார்.
பின்னலாடை தொழில் நிலை குறித்து அறிய, மத்திய சிறு, குறு நிறுவனத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நேற்று திருப்பூர் வந்தார். காலையில், காங்கேயம் அய்யாசாமி நகரில், மேம்படுத்தப்பட்ட கதர் ஆடை உற்பத்தி மையத்தையும், ஊதியூரில், பொது பயன்பாட்டுக்கான கயிறு உற்பத்தி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
காங்கேயம் வட்டமலையில் உள்ள, ‘அனுகிரஹா பேஷன்’ நிறுவனத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி கட்டமைப்புகளை பார்வைஇட்டார்.அப்போது, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச் செயலர் விஜயகுமார், அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யால் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவது தவறு. நாட்டின், சிறு, குறு நிறுவன துறைகளில் ஒன்றான கயிறு ஏற்றுமதி, 2,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அனைத்து வகையான நிறுவனங்களும், நிதி ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். பணம் மறுசீரமைப்பு, ஜி.எஸ்.டி,யால், நிதி சார் ஒழுங்குபடுத்துதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சில சிரமங்களை பொறுத்து தான் ஆக வேண்டும். திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், பீஹாரின் வெவ்வேறு பகுதிகளில், தங்கள் கிளைகளை உருவாக்க வேண்டும். காதி ஆடை உற்பத்தியிலும் கவனம் செலுத்தவேண்டும். திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கைகளை, ஜவுளித் துறை, வர்த்தகத் துறையிடம் கொண்டு செல்வேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், கயிறு வாரிய செயலர் நெகி உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|