ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ... ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவ­சர கால நிதியை எளிதாக உருவாக்கும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2018
00:13

வாழ்க்­கையில் எதிர்­பா­ராத நெருக்­க­டிகள் எப்­போது வேண்­டு­மானாலும் ஏற்­படலாம். இது போன்ற நேரங்­களில் நிதிச் சுமையும் சேர்ந்­தி­ருந்தால் மேலும் சோத­னை­யா­கி­விடும். இந்த நிலையை தவிர்க்க, ‘எமர்­ஜென்ஸி பண்ட்’ எனப்­படும் அவ­ச­ர­கால நிதியை உரு­வாக்கிக் கொள்­வது அவ­சி­ய­ம். பொது­வாக, 6 மாத கால அடிப்­படை செல­வுக்கு தேவை­யான தொகை­யாக இது அமை­கி­றது. இத்­த­கைய நிதியை உரு­வாக்­கும் வழிகள்:

செலவு கணக்கு:
ஆறு மாத அடிப்­படை செல­வு­க­ளுக்கு எவ்­வ­ளவு தொகை தேவை என்­பதை தீர்­மா­னிக்க, வாடகை (வீட்­டுக்­கடன் தவணை), போக்­கு­வ­ரத்து, மளிகை, கல்விச் செலவு, உணவு போன்ற அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு, மாதந்­தோறும் ஆகும் செலவை கணக்­கிட்டு அறிய வேண்டும். இதர முக்­கிய செல­வு­க­ளையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செலவை குறைப்­பது:
மாதாந்­திர செல­வு­களை கணக்­கிட்ட பின், அவற்றில் எவற்றை எல்லாம் குறைத்­துக் ­கொள்ள முடியும் என ஆராய வேண்டும். முற்­றிலும் தவிர்க்கக் கூடிய வீண் செல­வு­களையும் கண்­ட­றிய வேண்டும். கிரெடிட் கார்டு பில்லை குறைப்­பது, வெளியே சாப்­பி­டு­வதை தவிர்ப்­பது போன்­ற­வை­யாக இவை இருக்­கலாம்.

உபரி தொகை:
மாதச் செல­வுகள், கட்­டுப்­ப­டுத்தக் கூடிய செல­வு­களை கண்­ட­றிந்த பின், கையில் இருக்கக் கூடிய உபரி தொகை பற்­றிய தெளி­வான புரிதல் கிடைக்கும். இந்த தொகையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, அவ­சர கால நிதியை உரு­வாக்க தேவை­யான காலத்தை கணக்­கிடலாம். அதற்­கேற்ப மாதந்­தோறும் அவ­சர கால நிதிக்­காக சேமித்து வர வேண்டும்.

எதில் முத­லீடு :
அவ­சர கால நிதியை உரு­வாக்­கு­வது போலவே அதை சரி­யாக முத­லீடு செய்­வதும் முக்­கியம். வைப்பு நிதி அல்­லது லிக்விட் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்­யலாம்; தொடர் வைப்பு நிதி­யையும் நாடலாம். கணவன், மனைவி இணைந்தும் இதற்­கான கணக்கு துவக்­கலாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட முத­லீட்டு வாய்ப்­பு­க­ளையும் நாடலாம்.

கவ­னிக்க வேண்­டி­யவை :
உங்­க­ளுக்கும், குடும்­பத்­திற்கும் போது­மான மருத்­துவக் காப்­பீடு இருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்­போது தான், மருத்­துவ தேவைக்­காக அவ­சர கால நிதி சேமிப்பில் கை வைக்­காமல் இருக்க முடியும். போது­மான காப்­பீடு இருப்­பதும் அவ­சியம். பழைய கடனை அடைக்கும் வரை, புதிய கடன் வாங்­காமல் இருப்­பது நல்­லது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)