பதிவு செய்த நாள்
21 மே2018
00:13
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து, 4வது வாரமாக, வாராந்திர அடிப்படையில் சரிவை சந்தித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தின்படி, மே 11ம் தேதி அன்னிய செலாவணி கையிருப்பு, 1.2 பில்லியன் டாலர் குறைந்து, 417.7 பில்லியன் டாலராகவும் இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு ஏப்., 13ம் தேதி, 426 பில்லியன் டாலராக உச்சத்தை தொட்டது.
அதன் பிறகு வாராந்திர சரிவு ஏற்பட்டுள்ளதையும், ரிசர்வ் வங்கி டாலர் விற்பனையை மேற்கொண்டதே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. ரூபாயின் தேய்மானத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கை, அன்னிய செலாவணி கையிருப்பை குறையச் செய்து உள்ளதாக கருதப்படுகிறது.
அன்னிய செலாவணியின் கையிருப்பின் அங்கமாக அமைந்த வெளிநாட்டு நாணய சொத்துகளின் மறுமதிப்பீடு இதற்கு ஒரு காரணம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|