ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ... ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை: இப்­போது அரசு என்ன செய்ய வேண்­டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2018
00:22

அர­சி­யல் நிகழ்­வு­களை விட, பொரு­ளா­தார நிகழ்­வு­கள் வேகம் பிடிக்க துவங்கி உள்­ளன. ஆனா­லும், அவற்றை நாம் அதி­கம் கண்­டு­கொள்­ள­வில்லை. கச்சா எண்­ணெ­யின் விலை, 80 டாலரை கடந்­தது. டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு, 68ஐ தொட்­டது. நாட்­டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, நான்­கா­வது வார­மாக குறைந்­தது. நாட்­டின் வணிக பற்­றாக்­குறை விரிவு அடைந்­தது.

இவற்றை பொரு­ளா­தா­ரத்­திற்­கான எச்­ச­ரிக்கை மணி என்று சொன்­னால் மிகை அல்ல. இத்­த­கைய சூழல் வெகுகாலத்­திற்கு பின் தற்­போது உரு­வாகி உள்­ளது. பொரு­ளா­தா­ரச் சூழல்­கள் மாறு­வது அர­சு­க­ளின் கையில் இல்லை. ஆனால், அவற்­றின் தாக்­கம் அறிந்து செயல்­ப­டு­வது அர­சு­க­ளின் பொறுப்பு. இடை­யில் வரும் அர­சி­யல் நிர்­பந்­தங்­க­ளை­யும், நெருக்­க­டி­க­ளை­யும் கடந்து போகும் துணிவை, அரசு வெளிப்ப­டுத்த வேண்­டும்.

அரசு கொள்­கை:
இந்த அரசு அத்­த­கைய துணிவை இது­வரை வெளிப்­ப­டுத்தி இருந்­தா­லும், இந்த காலக்­கட்­டம் மிக முக்­கி­ய­மா­னது. வள­ரும் சூழ­லுக்கு ஏற்ப அரசு அமைக்­கும் வியூ­கங்­கள் கூர்ந்து கவ­னிக்­கப்­பட வேண்­டி­யவை. அந்த வியூ­கங்­களை அமைப்­ப­தில் அரசு காட்­டும் நாட்­ட­மும், தீவி­ர­மும், பொரு­ளா­தா­ரத்­தின் மீது, நீண்­ட­கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமை­யும்.ஒரு முத­லீட்­டா­ள­ராக, அர­சி­டம் நாம் என்ன எதிர்­பார்க்க வேண்­டும்?

முத­லில், கடி­ன­மான கால­கட்­டத்­தில், கடி­ன­மான முடி­வு­களை எடுக்க அரசு துணிய வேண்­டும். பற்­றாக்­கு­றை­கள் வள­ராத வண்­ணம், நம் பொரு­ளா­தா­ரத்­திற்கு உகந்த முடி­வு­களை எடுக்க அரசு முனைய வேண்­டும். அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் தொடர்ந்து பெருக வழி­செய்ய வேண்­டும்.தொடர்ந்து பன்­னாட்டு முத­லீ­டு­கள் இந்­தி­யா­விற்கு வர வேண்­டு­மெ­னில், அரசு காட்­டும் துணிச்­ச­லும், சீர்­தி­ருத்த நகர்­வு­களும் விரைந்த செயல்­பா­டாக அமைய வேண்­டும். வாக்­கு­வங்கி அர­சி­ய­லுக்கு பணி­யா­மல், பொரு­ளா­தார மேலாண்­மை­யின் தரம் பாதிக்­காத வண்­ணம், அரசு கொள்­கை­களை நகர்த்த வேண்­டும்.

வலி­மை­யான பார­தம்:
குறு­கிய கால கஷ்­டங்க­ளுக்­கும், அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­கும் அஞ்­சாது ஆட்சி செய்ய வேண்­டும்.இத்­த­கைய கால­கட்­டத்­தில், அரசு முடி­வெ­டுக்க தயங்­கி­னால், சந்தை சூழல், அர­சின் நிலை­மையை இக்­கட்­டில் கொண்டு போய் நிறுத்­தும் தன்மை கொண்­டது. அரசு தானே முன்­வந்து கடி­ன­மான முடி­வெ­டுக்­கும் பட்­சத்­தில், அவை தரும் சிர­மங்­கள், நிர்­பந்­தத்­தில் எடுக்­கும் முடி­வு­களை விட மித­மாக இருக்­கும். இதை அனை­வ­ரும் உண­ர­ வேண்­டும்.

உதா­ர­ண­மாக, பெட்­ரோ­லி­யப் பொருள்­களை, ஜி. எஸ். டி., சட்­டத்­திற்கு உட்­ப­டுத்­து­வது. இதற்கு அதிக துணிவு தேவை. மற்ற பொருட்­களில் இருந்து வரும் வரு­வாய் பெருக்­கத்தை சரி­யாக கணித்து, இந்த துணி­கர முடிவை எடுக்க வேண்­டும். மற்ற பொருள்­களில் வரி ஏய்ப்பை தடுத்து, அவற்­றில் வரி பெருக்­கம் ஏற்­பட்­டால், அதுவே அர­சுக்கு உரிய நிதி வலி­மையை தரும்.‘‘நல்ல பொரு­ளா­தா­ரமே நல்ல அர­சி­ய­லுக்கு வழி செய்­யும்’’ என்ற அடிப்­படை புரி­தலை, இந்த அரசு இது­வரை கடை­பி­டித்து வரு­கிறது. அந்த நம்­பிக்கை சார்ந்து, இனி அடுத்த கட்­டம் நோக்கி வேக­மாக நகர வேண்டி உள்­ளது. அப்­படி நகர்ந்­தால், இதை­யும் கடந்து ஒரு வலி­மை­யான பார­தம் அமை­யும்.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)