ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ... பீன்ஸ் விலை ஏற்றம் பீன்ஸ் விலை ஏற்றம் ...
ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2018
00:25

டால­ருக்கு இணை­யான, இந்­திய ரூபா­யின் மதிப்பு பெரு­ம­ளவு சரிந்­துள்­ளது, கவ­லை­யை­யும், பயத்­தை­யும் ஒருங்கே எழுப்­பி­யுள்­ளது. இதன் அர்த்­தம் என்ன? எப்­படி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நம்மை பாதிக்­கப் போகிறது?
சர்­வ­தேச வர்த்­த­கத்தை நிர்­ண­யிப்­ப­தில் முக்­கிய பங்கு வகிப்­பது, அமெ­ரிக்க நாண­ய­மான, டாலர். அதன் விலை­யேற்­ற­மும், வீழ்ச்­சி­யும், உல­கின் பல நாடு­க­ளின் நாண­யங்­க­ளைப் பாதிப்­புக்கு உள்­ளாக்­கும். இதில், நம் இந்­தி­யா­வும் விதி­வி­லக்­கல்ல. சமீ­பத்­தில், ஒரு டால­ருக்கு இணை­யான இந்­திய ரூபா­யின் மதிப்பு, 68.08 என்ற அள­வுக்­குச் சரிந்­து­போ­னது. இந்த ஆண்டு தொடக்­கத்­தில் இருந்து இது­வரை ரூபா­யின் மதிப்பு, 6 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. பதி­னைந்து மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு, ரூபா­யின் மதிப்பு சரிந்­துள்­ளது கவலை அளிக்­கிறது.

சரிவு ஏன்?
நீங்­கள் கத்­தி­ரிக்­காய் வாங்­கப் போகி­றீர்­கள் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். அன்­றைக்கு ஏரா­ள­மான பேர் கத்­தி­ரிக்­காய் வாங்க வரு­கின்றனர். சந்­தைக்கு வந்த கத்­தி­ரிக்­கா­யின் அளவோ குறைவு என, வைத்­துக்­கொள்­ளுங்­கள். அதன் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­து­வி­டும் இல்­லையா? இது­தான் டாலர் விஷ­யத்­தில் நடக்­கிறது.இங்கே தேவை அதி­கம். டாலர் இருப்பு குறைவு. ஏன் டாலர் புழக்­கம் குறைந்­து­போ­னது? நம் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் நாண­யச் சந்­தை­யில் டாலரை அதி­கம் விற்­பனை செய்­ய­வில்லை.

இரண்­டா­வது கார­ணம், அ­ன்னிய முத­லீ­டு­கள் குறைந்­து­போய்­விட்­டது. அவர்­கள் நாண­யச் சந்­தை­யில் டாலரை விற்று ரூபாய் ஆக்­கித்­தான் இந்­திய பங்கு மற்­றும் கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­வார்­கள். இந்­தி­ய சந்­தை­களில் முத­லீடு செய்­யும் ஆர்­வம் குறைந்­து­போ­ன­தால், அந்­நிய முத­லீட்­டா­ளர்­கள் டால­ரைக் கொண்­டு­வ­ர­வில்லை.

இதே­ச­ம­யத்­தில், இன்­னொரு விஷ­ய­மும் நடந்து வரு­கிறது. அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரம் வலிமை பெற்று வரு­கிறது. மேலும், அங்கே வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம். மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் அள­வும், பெரு­கும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் விளை­வாக, சர்­வ­தேச நாண­யங்­க­ளுக்கு இணை­யான டாலர் மதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. மூன்­றா­வது முக்­கிய கார­ணம் கச்சா எண்­ணெய் விலை உயர்வு. சமீ­பத்­தில், ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெய் விலை, 80 டால­ரைத் தொட்­டு­விட்­டது. நம் இந்­திய பெட்­ரோ­லி­யத் தேவை­யில், 70 சத­வீ­தத்தை இறக்­கு­மதி செய்­து­வ­ரு­கி­றோம். இந்­நி­லை­யில், கூடு­தல் டாலர் கொடுத்து கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்­ய­ வேண்­டிய தேவை. இத­னால், டால­ரின் தேவை அதி­க­ரித்­துள்­ளது.

நடப்பு கணக்கு :
இதன் விளை­வாக, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் நடப்பு கணக்­குப் பற்­றாக்­கு­றை­யின் அளவு, 1.7 சத­வீ­த­மாக உள்­ளது. இது, 2018-- – 19ம் நிதி­யாண்­டின் இறு­தி­யில், 2.4 சத­வீ­த­மாக உய­ரக்­கூ­டும் என்று தெரி­வித்­துள்­ளது கோல்­டு­மென் சாக்ஸ் என்ற ஆய்வு நிறு­வ­னம். இத­னால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி துரி­த­மா­க­லாம். ரூபா­ய் மதிப்பு வீழ்ச்­சி­யைத் தடுக்க, ஆர்.பி.ஐ., சர்­வ­தேச நாண­யச் சந்­தை­களில் செயல்­பட்டு வரு­வது தெரி­கிறது.நம் நாணய கையி­ருப்பு, 2.5 பில்­லி­யன் டாலர்­கள் குறைந்து, 423.58 பில்­லி­யன் டாலர்­க­ளாக தற்­போது உள்­ளது. அதா­வது, தன் கையி­ருப்­பில் உள்ள தொகையை முத­லீடு செய்­வ­தன் மூலம், டால­ருக்கு இணை­யான இந்­திய ரூபா­யின் மதிப்பை நிலை­நி­றுத்த, ஆர்.பி.ஐ., முயற்சி செய்து வரு­கிறது. ஆனா­லும், இந்த வீழ்ச்சி இத்­தோடு நிற்­கப் போவ­தில்லை. ஒரு டால­ரின் மதிப்பு, 70 ரூபா­யைத் தொடக்­கூ­டும் என, நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

பாதிப்பு என்ன?
வெளி­நாட்டு சுற்­றுலா செல்­வோர் கூடு­தல் ரூபாய் செல­வ­ழிக்க வேண்­டும். வெளி­நாட்­டில் படிக்­கும் பிள்­ளை­க­ளுக்கு பணம் அனுப்­பும் போது, கூடு­தல் தொகை அனுப்ப வேண்­டும். இறக்­கு­மதி செய்­யும் பொருட்­க­ளுக்கு கூடு­தல் பணம் செலுத்த வேண்­டும். எண்­ணற்ற துறை­களில், நாம் பல கரு­வி­களை இறக்­கு­மதி செய்­து­ வ­ரு­கி­றோம். அவற்­றின் விலை உயர்ந்­து­வி­டும். தங்­கத்தை நாம் இறக்­கு­மதி தான் செய்­து­ வ­ரு­கி­றோம். அதன் விலை­யும், ‘கிடு­கி­டு’­வென உயர்ந்­து­ வி­டும்.ரூபா­ய் மதிப்பு வீழ்ச்­சி­யின் பாதிப்­பு­கள் பர­வ­லா­னது. தொட்டு தொட்டு ஒவ்­வொரு பொரு­ளி­லும், அதன் தாக்­கம் வெளிப்­படும். பெட்­ரோல் விலை நான்கு ரூபாய் வரை உயர்ந்­தது, இதன் பாதிப்­பு­களில் ஒன்று.

என்ன செய்­ய­லாம்?
கச்சா எண்­ணெ­யின் விலை, நம் கையில் இல்லை. அது தானாக இறங்­கி­னால் தான் உண்டு. அடுத்து, ஜூன் மாதம் முதல் வாரத்­தில் வர­வி­ருக்­கும் நிதிக் கொள்கை குழு­வின் சந்­திப்­பில் எடுக்­கப்­படும் முடி­வு­கள் கொஞ்­சம் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பல்­வேறு தீர்­வு­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றில் இரண்டு தீர்­வு­கள் முக்­கி­ய­ மா­னவை. ஒன்று, வெளி­நாட்­டில் சம்­பா­தித்து இந்­தி­யா­வுக்கு பணம் அனுப்­பு­வோர் ஏரா­ளம். அவர்­களை மையப்­ப­டுத்தி, சேமிப்­பு­க­ளை திரட்­டும் வங்­கி­கள் உண்டு. அந்த வங்­கி­க­ளுக்­கும், முத­லீ­டு­க­ளுக்­கும் சிறப்­புச் சலு­கை­கள் கொடுப்­ப­தன் மூலம், ஏரா­ள­மான, பாது­காப்­பான அ­ன்னிய முத­லீ­டு­கள் இந்­தி­யா­வுக்கு வந்து சேரும். 2013ல் இந்த நடை­முறையை பின்­பற்­றி­ய­தன் விளை­வாக, அப்­போது சரி­வைச் சந்­தித்த ரூபா­யின் மதிப்பு, பின்­னர் உயர்ந்­தது.

உற்­பத்தி திறன்:
அதே­போல், நம் ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிக்க வேண்­டும். சீனா­வி­லும், இந்­தி­யா­வி­லும், தொழி­லா­ளர்­க­ளின் ஊதி­யங்­கள் ஓர­ள­வுக்கு ஒரே­மா­திரி தான் இருக்­கின்­றன. ஆனால், சீனா­விலோ அந்­தத் தொழி­லா­ளர்­க­ளின் உற்­பத்­தித் திறன், இந்­திய பணி­யா­ளர்­க­ளை­விட இரு­ம­டங்கு அதி­க­மாக உள்­ளது. அத­னால், அவர்­க­ளு­டைய தயா­ரிப்­பு­க­ளின் அடக்­க­விலை மிக­வும் குறை­வாக இருக்­கிறது. சர்­வ­தேச சந்­தை­யில், விலை போட்­டி­யில் இந்­தியா முதன்மை பெற­வேண்­டு­மா­னால், நம் உற்­பத்தி செல­வு­க­ளைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும். இதனை செய்­வ­தன் மூலம், ஏற்­று­ம­தி­கள் அதி­க­மா­கும். அன்னிய செலா­வணி அதி­க­மாக இந்­தியா வந்­து­சே­ரும். ரூபா­யின் மதிப்பு சமச்­சீர் அடை­யும்.

எல்­லா­வற்­றுக்­கும் மேல் ஒன்று இருக்­கிறது. அது கச்சா எண்­ணெய். எவ்­வ­ளவு விரை­வாக நாம் மாற்று எரி­சக்­தி­களை நோக்கி நகர்­கி­றோமோ அவ்­வ­ளவு நல்­லது. குறிப்­பாக மின்­சா­ரம். இல்­லை­யெ­னில், கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யி­னால், நம் ரூபாய் தொடர்ந்து பாதிப்­பைச் சந்­தித்­துக்­கொண்டே இருக்­கப் போவது உறுதி. டாலர் தேவையை எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு குறைத்­துக்­கொள்­கி­றோமோ, அவ்­வ­ள­வுக்கு அவ்­வ­ளவு நமக்கு நிம்­மதி கிடைக்­கும்.

-ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)