பதிவு செய்த நாள்
22 மே2018
00:39
சேலம் : கொண்டைக்கடலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், பொட்டுக்கடலை விலை, கிலோவுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தது.
இந்தியாவின் கொண்டைக்கடலை தேவையில், 50 சதவீதத்தை, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பூர்த்தி செய்கின்றன. மீதி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த, 2015, 2016, 2017ல், அதன் இறக்குமதி அதிகரித்து, உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பயிரிடுவதை குறைத்தனர்.
நடப்பாண்டு வெளிநாடுகளில், விளைச்சல் பல மடங்கு அதிகரித்து, குறைந்த விலைக்கு இங்கு வரத் துவங்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து கொண்டைக்கடலையை இறக்குமதி செய்ய, கடந்த வாரம் தடை விதித்தது. இதனால் அதை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பொட்டுக்கடலை விலை, நேற்று கிலோவுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தது.
குறிப்பாக, முதல் ரகம் கிலோ, 80க்கு விற்றது, 84 ரூபாய், இரண்டாம் ரகம், 75க்கு விற்றது, 79 ரூபாய், மூன்றாம் ரகம், 60க்கு விற்றது, 64 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, கடலை பருப்பு, கடலை மாவு ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|