ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர இழப்பு ரூ.7,718 கோடிஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர இழப்பு ரூ.7,718 கோடி ... அக்னி வெயில் எதிரொலி; கற்றாழை விற்பனை ஜரூர் அக்னி வெயில் எதிரொலி; கற்றாழை விற்பனை ஜரூர் ...
ஐரோப்பாவில் கால்பதிக்கிறது, ‘ஆர்ஜியோ’; குட்டி நாட்டில் இருந்து கோலோச்ச திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2018
00:47

புதுடில்லி : ஆயுள் முழு­வ­தும் இல­வச அழைப்­பு­கள்; அதி­ரடி கட்­ட­ணக் குறைப்பு; திரும்ப பணம் பெறும், ‘பியூச்­சர் போன்’ போன்ற அதி­ரடி திட்­டங்­க­ளால், கலக்கி வரும், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், ஐரோப்­பிய சந்­தை­யி­லும் கால்பதிக்க உள்­ளது.

எஸ்­தோ­னியா என்ற குட்டி நாட்­டில் இருந்து, ஐரோப்­பிய நாடு­களில், தொலை­தொ­டர்பு சேவையை வழங்க முடிவு செய்­துள்­ளது. ஆர்­ஜியோ, எஸ்­தோ­னி­யாவை தேர்ந்­தெ­டுக்க முக்­கிய கார­ணம், அதன் புது­மை­யான, ‘டிஜிட்­டல்’ கொள்­கை­கள் தான். இந்­நாடு, தொழில் துவங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘இ – ரெசி­டன்சி’ என்ற திட்­டத்­தில், பிரத்­யே­க­மாக, ‘டிஜிட்­டல் அடை­யாள எண்’ வழங்­கு­கிறது.

இதன் மூலம், ஒரு நிறு­வ­னம், உல­கின் எந்த மூலை­யில் இருந்­தா­லும், எஸ்­தோ­னியா மூலம், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­களில், குறைந்த செல­வில், வர்த்­த­கம் புரி­ய­லாம். சுருக்­க­மாக சொன்­னால், இந்­தி­யா­வில் ஒரு நிறு­வ­னம் தயா­ரிக்­கும் பொருள் அல்­லது வழங்­கும் சேவையை, எஸ்­தோ­னியா மூலம், ஐரோப்பா முழு­வ­தற்­கும் அளிக்­க­லாம்.

இங்கு, வர்த்­தக நடை­மு­றை­கள், பணப் பரி­வர்த்­த­னை­கள், வரி கணக்கு தாக்­கல், ஆவ­ணங்­களில், ‘டிஜிட்­டல்’ கையொப்ப வசதி உள்­ளிட்ட அனைத்து செயல்­பா­டு­களும், மின்­னணு தொழில்­நுட்­பத்­தில் நடை­பெ­று­கின்­றன. அத­னால், எந்த நாட்­டில் இருந்­தும், எஸ்­தோ­னியா மூலம், குறைந்த செல­வில் வர்த்­த­கம் புரி­வது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

இதற்­காக, பிரத்­யேக கணினி ஒருங்­கி­ணைப்பு சேவை, தக­வல் பாது­காப்பு உள்­ளிட்ட வச­தி­களை, எஸ்­தோ­னியா ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக, இந்­நாட்­டில் மிகச் சுல­ப­மா­க­வும், விரை­வா­க­வும் தொழில் துவங்க முடி­கிறது. இத்­த­கைய வச­தி­களை பயன்­ப­டுத்தி, தன் தொலை­தொ­டர்பு சேவையை, இந்­தி­யா­விற்கு வெளியே கொண்டு செல்ல, ஆர்­ஜியோ முடிவு செய்­துள்­ளது.

இது குறித்து ரிலை­யன்ஸ் குழும அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மார்ச் மாதம், இந்­தியா வந்த எஸ்­தோ­னிய அரசு பிர­தி­நி­தி­கள், ரிலை­யன்ஸ் குழும தலை­வர் முகேஷ் அம்­பா­னியை சந்­தித்து பேசி­னர். இதை­ய­டுத்து, எஸ்­தோ­னிய வர்த்­தக பிரிவை துவக்க, முதற்­கட்­ட­மாக, 12.20 கோடி ரூபாய் ஒதுக்க உள்­ளோம்.

இந்த திட்­டம் மூலம், உள்­நாட்­டின் கடு­மை­யான போட்டி, குறை­வான லாப வரம்பு போன்­ற­வற்­றால் ஏற்­படும் இடர்ப்­பா­டு­களை, ஆர்­ஜி­யோ­வால் சமா­ளிக்க முடி­யும். அனைத்து அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களும், நிறு­வ­னத்­தி­டம் உள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்­த­படி, ஐரோப்­பா­வில் சேவையை விரி­வு­ப­டுத்த முடி­யும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

வேகமான வளர்ச்சி :
வடக்கு ஐரோப்­பா­வில் உள்ள சிறிய நாடு, எஸ்­தோ­னியா. மக்­கள் தொகை, 13 லட்­சம். 1991ல் சுதந்­திர நாடாக மறு­பி­ர­க­ட­னம் செய்­யப்­பட்­டது. அது முதல், தக­வல் தொழில்­நுட்­பத் துறைக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளித்­தது. அத­னால், ‘டிஜிட்­டல்’ தொழில்­நுட்­பத்­தில் மிக­வும் முன்­னே­றிய நாடு­களில் ஒன்­றாக உரு­வெ­டுத்­துள்­ளது. வலை­த­ளம் மூலம், 2005ல் பொது தேர்­தல் நடத்­திய முதல் நாடு; முதன் முறை­யாக, 2014ல், ‘இ – ரெசி­டன்சி’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய நாடு என்ற சிறப்­பும், எஸ்­தோ­னி­யா­வுக்கு உள்­ளது. இங்கு, அரசு சேவை­களில், 99 சத­வீ­தத்தை, வலை­த­ளம் மூலம் பெறும் வசதி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)