பதிவு செய்த நாள்
26 மே2018
00:30
மும்பை: என்.எஸ்.இ., மற்றும் எம்.சி.எக்ஸ்., நிறுவனங்களின் இணைப்பு தொடர்பான பேச்சு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2016 நிலவரப்படி, 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்நிறுவனம், விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தையில், 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே, 2017 டிசம்பரில், ‘பங்குச் சந்தை நிறுவனங்கள், விளைபொருள் முன்பேர வர்த்தகத்திலும் ஈடுபடலாம்’ என, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. அதனால், என்.சி.இ., மற்றும் எம்.சி.எக்ஸ்., நிறுவனங்கள் இணைப்பிற்கு, செபி அனுமதி வழங்கும் எனலாம்.எனினும், இந்த இணைப்பு நடவடிக்கைக்கு, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.என்.சி.டி.இ.எக்ஸ்., நிறுவனத்தின், 15 சதவீத பங்குகள், என்.எஸ்.இ., வசம் உள்ளன. அவற்றை, என்.எஸ்.இ., விற்கும் பட்சத்தில், இணைப்பு நடவடிக்கைக்கு, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் ஆட்சேபம் தெரிவிக்காது எனலாம்.இந்த, செயல்பாடுகளுக்கு பின்னர் தான், இரு நிறுவனங்களும் இணைய முடியும்.இதன் மூலம், இரு நிறுவனங்களுக்கும், பரஸ்பர ஆதாயம் கிடைக்கும். இணைப்புக்கு பின், முதலீட்டாளர்களும், பங்கு வர்த்தகர்களும், என்.எஸ்.இ., மூலம், பங்குகள், முன்பேர வர்த்தகம், விளைபொருள் முன்பேர வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபடலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தையும், விளைபொருள் முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|