பதிவு செய்த நாள்
26 மே2018
00:32
புதுடில்லி: தனியார் துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், 2017 – -18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 76.76 சதவீதம் குறைந்து, 50.56 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 217.56 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வங்கியின் செயல்பாட்டு வருவாய், 1,665.23 கோடியில் இருந்து, 1,699.53 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.வாராக் கடன் மற்றும் இதர செலவினங்களுக்கான ஒதுக்கீடு, 217.50 கோடியில் இருந்து, 394.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறைந்த வருவாயில், வாராக் கடன் மற்றும் இதர செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதால், வங்கியின் நிகர லாபம் குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம், 42.95 சதவீதம் சரிவடைந்து, 605.98 கோடியில் இருந்து, 345.67 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், மொத்த வருவாய், 6,404.57 கோடியில் இருந்து, 6,599.58 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வாராக் கடன், 2.53 சதவீதத்தில் இருந்து, 4.16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|