பதிவு செய்த நாள்
26 மே2018
00:33
புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இதன் மூலம், சந்தை மதிப்பில் இத்தகைய உச்சத்தை எட்டிய, முதல் நிறுவனம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெற்று உள்ளது.நேற்று, மும்பை பங்குச் சந்தையில், டி.சி.எஸ்., நிறுவன பங்கின் விலை, வர்த்தகத்தின் இடையே, ஓராண்டில் இல்லாத அளவிற்கு, 3,674 ரூபாயாக அதிகரித்தது. இந்த விலையுடன், டி.சி.எஸ்., நிறுவனத்தின் மொத்த பங்குகளை பெருக்கும் போது, அதன் சந்தை மதிப்பு, 7.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இந்தாண்டின் துவக்கத்தில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதன் முறையாக, 6 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, டி.சி.எஸ்., இந்த உச்சத்தை எட்டியது.கடந்த மாதம், இதன் சந்தை மதிப்பு, 6,80,912 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் மூலம், இந்த உச்சத்தை தொட்ட முதல் நிறுவனம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெற்றது. நேற்று, சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டி,புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சந்தை மதிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 5.84 லட்சம் கோடி ரூபாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த மூன்று இடங்களில், எச்.டி.எப்.சி., இந்துஸ்தான் லீவர், ஐ.டி.சி., நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|