பதிவு செய்த நாள்
27 மே2018
00:26
மும்பை: ‘‘மத்திய அரசின், சிறப்பு ஊக்கச் சலுகை திட்டத்தால், ஜவுளி துறை, 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது,’’ என, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அவர், மும்பையில், இந்திய தொழிலக கூட்டமைப்பின், ஜவுளி மாநாட்டில் பேசியதாவது:ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்காக, மத்திய அரசு, 2016, ஜூனில், 6,000 கோடி ரூபாய்க்கு சிறப்பு ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது.இத்திட்டத்தின் கீழ், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு, ஊக்கத் தொகை உட்பட, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.இதனால், ஓராண்டில், ஜவுளி துறையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து உள்ளன. சிறப்பு ஊக்கச் சலுகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஜவுளி துறையில், 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது.ஜவுளி அமைச்சகமும், ஜவுளி துறையும், அன்றாடநடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, ஜவுளி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.எனினும், உற்பத்தியாகும் ஜவுளிகளை வினியோகிப்பதில் ஏற்படும் காலதாமதம் தான், மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முதலீட்டின் மீதான வருவாய் கிடைப்பதும் தாமதமாகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு, முதன் முறையாக, வர்த்தகதுறையின் கீழ், சரக்கு போக்குவரத்து பிரிவை அமைத்துள்ளது.உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் ஜவுளி துறை சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து, மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபுவை, ஓரிரு தினங்களில் சந்தித்து பேச உள்ளேன்.மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், ஜவுளி துறை மேலும் வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று மடங்கு உயரும்ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும். ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.பி.சி.ஜி., ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|