மின்னணு முறை கணக்கு தாக்கலுக்கு 7 வருமான வரி படிவங்கள் வெளியீடுமின்னணு முறை கணக்கு தாக்கலுக்கு 7 வருமான வரி படிவங்கள் வெளியீடு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு ...
ஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2018
00:26

மும்பை: ‘‘மத்­திய அர­சின், சிறப்பு ஊக்­கச் சலுகை திட்­டத்­தால், ஜவுளி துறை, 27 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்டை ஈர்த்­துள்­ளது,’’ என, மத்­திய ஜவுளி துறை அமைச்­சர் ஸ்மி­ருதி இரானி தெரி­வித்­துள்­ளார்.
அவர், மும்­பை­யில், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பின், ஜவுளி மாநாட்­டில் பேசி­ய­தா­வது:ஜவுளி மற்­றும் ஆயத்த ஆடை­கள் துறை வளர்ச்­சிக்­காக, மத்­திய அரசு, 2016, ஜூனில், 6,000 கோடி ரூபாய்க்கு சிறப்பு ஊக்­கச் சலுகை திட்­டத்தை அறி­வித்­தது.இத்­திட்­டத்­தின் கீழ், ஜவுளி மற்­றும் ஆயத்த ஆடை உற்­பத்தி, ஏற்­று­மதி உள்­ளிட்­ட­வற்­றுக்கு வரி விலக்கு, ஊக்­கத் தொகை உட்­பட, பல்­வேறு சலு­கை­கள் வழங்­கப்ப­டு­கின்­றன.இத­னால், ஓராண்­டில், ஜவுளி துறை­யில், உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு முத­லீ­டு­கள் அதி­க­ரித்­து உள்­ளன. சிறப்பு ஊக்­கச் சலுகை திட்­டம் அறி­விக்­கப்­பட்ட பின், ஜவுளி துறை­யில், 27 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு குவிந்­துள்­ளது.ஜவுளி அமைச்­ச­க­மும், ஜவுளி துறை­யும், அன்­றாடநட­வ­டிக்­கை­களில் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வழி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இது, ஜவுளி துறை­யின் எதிர்­கால வளர்ச்­சிக்கு உத­வும்.எனி­னும், உற்­பத்­தி­யா­கும் ஜவு­ளி­களை வினி­யோ­கிப்­ப­தில் ஏற்­படும் கால­தா­ம­தம் தான், மிகப் பெரிய சவா­லாக உள்­ளது. இத­னால், தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, முத­லீட்­டின் மீதான வரு­வாய் கிடைப்­ப­தும் தாம­த­மா­கிறது.இந்த பிரச்­னைக்கு தீர்வு காண, மத்­திய அரசு, முதன் முறை­யாக, வர்த்­தகதுறை­யின் கீழ், சரக்கு போக்­கு­வ­ரத்து பிரிவை அமைத்­துள்­ளது.உலக வர்த்­தக அமைப்­பின் விதி­மு­றை­கள் மற்­றும் ஜவுளி துறை சந்­தித்து வரும் பிரச்­னை­கள் குறித்து, மத்­திய வர்த்­தக அமைச்­சர் சுரேஷ் பிர­புவை, ஓரிரு தினங்­களில் சந்­தித்து பேச உள்­ளேன்.மத்­திய அரசு எடுத்து வரும் நட­வ­டிக்­கை­க­ளால், ஜவுளி துறை மேலும் வளர்ச்சி காணும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மூன்று மடங்கு உயரும்ஜவுளி மற்­றும் ஆடை­கள் துறை, 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயி­ரம் கோடி டாலர் மதிப்­புள்­ள­தாக உரு­வெ­டுக்­கும். ஆண்­டுக்கு, 15 ஆயி­ரம் கோடி டாலர் அன்­னி­யச் செலா­வணி கிடைக்­கும்.பி.சி.ஜி., ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)