பதிவு செய்த நாள்
28 மே2018
01:02
இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து இரண்டாவது வாரமாக, சரிவில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, 350 புள்ளிகள் சரிவினை சந்தித்தது.
சர்வதேச சந்தைகளைப் பொறுத்தவரை, கடந்த வெள்ளியன்று, அமெரிக்க சந்தைகளும் சரிவை சந்தித்தன. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வட கொரிய அதிபருடனான சந்திப்பை நிராகரித்ததன் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலால், பங்குச் சந்தைகளில் சரிவு நிகழ்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறையாகும். கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம், 4 சதவீதம் சரிவை சந்தித்தது. இறக்குமதி நாடுகளுக்கு, இறக்குமதி பில் குறையும் என்ற கண்ணோட்டம், இந்திய சந்தைகளுக்கு சாதகமான ஒரு சூழல் ஆகும்.
எச்.டி.எப்.சி., கோட்டக் பேங்க் ஆகியவற்றின், நான்காம் காலாண்டு நிதி அறிக்கைகள் லாபகரமாகவும், பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., எஸ்.பி.ஐ., ஆகியவை அதிக நஷ்டத்தை சந்தித்ததாகவும் அறிக்கைகள் வந்தன. 2017 முடிவில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன், 9.5 டிரில்லியன் ரூபாய் ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள், 52 வார குறைந்தபட்ச அளவுக்கு சரிந்தது. மறுபுறம், எப்.எம்.சி.ஜி., மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தில் வர்த்தகமாகியது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு பின், சிறிய உயர்வைக் கண்டது. வார இறுதியில், 0.70 சதவீதம் அதிகரித்து, 67.785 ஆக முடிவடைந்தது.
வரும் வியாழன் அன்று, கடந்த நிதி ஆண்டின், நான்காம் காலாண்டு, ஜி.டி.பி., நிலவரம் வர உள்ளது. இது முந்தைய காலாண்டை விட, 0.1 சதவீதம் அதிகரித்து, 7.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளியன்று, தொழில்துறை வளர்ச்சி விபரமும் வர உள்ளது. இந்த வாரத்தைப் பொறுத்தவரை, 200 நாட்கள் சராசரி சப்போர்ட், 10,350 ஆகும். ரெசிஸ்டென்ஸ் 10710 மற்றும் 10,790 ஆகும்.
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|