பதிவு செய்த நாள்
28 மே2018
01:04
கச்சா எண்ணெய்:
எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்தையில், கச்சா எண்ணெய், ஒரு பேரல் 4,400 ரூபாய் என்ற அளவினை தாண்டி, கடந்த வாரத்தில் வர்த்தகமானது. முந்தைய இரு வார சரிவிற்குப் பின், கடந்த வாரம் மட்டும், ஒரு பேரல், 380 ரூபாய் அதிகரித்து உச்ச விலையான, 4,418 ரூபாயை எட்டியது.இந்த விலையேற்றத்துக்கு, உலகளவில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் மற்றும் மோதல்கள் காரணமாகும்.
சிரியா நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தில், ரசாயன ஆயுதம் கையாளப்படும் எனில் அமெரிக்க ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ரஷ்ய ராணுவமும் இதனை கண்காணித்து வருகிறது.ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் உள்ள இடங்கள், இந்த தாக்குதல்களுக்கு ஆளாகின்றன.அடுத்து, ஈரான் அணு ஆயுதம் தொடர்பான அமெரிக்காவின் விவாதம், மே மாதத்துடன் முடிவடைகிறது.
எண்ணெய் விலை திடீர் உயர்வுக்கு, ஒபெக் நாடுகளின், மார்ச் மாதத்தின் மொத்த உற்பத்தி, தினசரி 2,01,000 பேரல்கள் குறைந்து, தினசரி 31.96 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் இருந்ததும், உறுப்பு நாடுகளின் உற்பத்தி குறைந்ததும் காரணமாகும். அங்கோலா, வெனிசுலா, அல்ஜீரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உற்பத்தி குறைந்துள்ளது.
ஒபெக் நாடுகளில், சவுதியும் நான் ஒபெக் உறுப்பு நாடுகளில், ரஷ்யாவும் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாகும். நடப்பு உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம், வரும் டிசம்பர், 2018ல் முடிவடைய உள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஒபெக் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில், உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று, சவுதி அரேபியாவின், எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,290 4,205 4,460 4,600என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 66.10 65.00 68.70 70.00
தங்கம், வெள்ளி:
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த ஆறு வாரங்களாக சரிவில் இருந்து வந்தது. தங்கம், ஒரு அவுன்ஸ் 1,365 டாலர் என்பதிலிருந்து, 84 டாலர்கள் குறைந்து, கடந்த வாரம், 1,281 டாலர் வரை சரிந்தது.இருப்பினும், இந்த காலகட்டத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டதன் விளைவாக, நமது உள்நாட்டு சந்தையில் விலை பெரிய அளவிற்கு சரியவில்லை.
எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்தையை பொறுத்த அளவில், கடந்த ஆறு வாரங்களில் தங்கம் விலையானது, 31,620 முதல் 30,850 ரூபாய் வரை என 770 ரூபாய் ஏற்ற இறக்க நிலையில் வர்த்தகமாகிறது.கடந்த மூன்று நாட்களில், ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு, 25 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி, கிலோவுக்கு, 300 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த புதன் முதல் வெள்ளி வரை, 20 டாலர் உயர்வு கண்டது.
அமெரிக்க அதிபர், வட கொரிய அதிபருடனான சந்திப்பை நிராகரித்ததன் காரணமாக ஏற்பட்ட அசாதாரணமான சூழலால், கடந்த வார இறுதியில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்பட்டது.அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ், தற்போது ஐந்து மாத உச்சத்தில் வர்த்தகமாகிறது. மேலும், அமெரிக்க அரசு கருவூலங்களின் ஆதாயம் தற்போது, 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,960 30,810 31,230 31,500காம்எக்ஸ் (டாலர்) 1,292 1,280 1,308 1,315
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 40,110 39,400 40,790 41,150காம்எக்ஸ் (டாலர்) 16.25 16.00 16.80 17.10
செம்பு:
கடந்த சில வாரங்களாக, சரிவில் இருந்து வந்த செம்பு விலை, கடந்த வாரம் சிறிது உயர்ந்து, வர்த்தகமானது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது, அமெரிக்கா, மிக அதிகமாக இறக்குமதி வரி விதித்ததன் காரணமாக, கடந்த சில வாரங்களாக விலை சரிவு நிகழ்ந்தது.இருப்பினும், அமெரிக்க இறக்குமதி குறையாமல், சீனாவின் ஏற்றுமதி அதிகரித்தது. இதன் விளைவாக, செம்பு விலை ஏற்றம் கண்டது. மேலும், சீனாவின் தொழிற்துறை தேவை, செம்பு விலைக்கு சாதகமாக அமைந்தது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 459.50 455.00 468.00 475.00
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|