பதிவு செய்த நாள்
28 மே2018
01:11
வேலைவாய்ப்பு சந்தையில் அதிகம் ஈர்ப்புடைய துறையாக, நுகர்பொருள் தயாரிப்பு துறை அமைந்துள்ளது. ‘நீல்சன் கேம்பஸ் டிராக் பிசினஸ் ஸ்கூல்’ ஆய்வில், எம்.பி.ஏ., பட்டதாரிகளின், 36 சதவீதத்தினர், எப்.எம்.சி.ஜி., எனக் குறிப்பிடப்படும் நுகர்பொருள் தயாரிப்பு துறையில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 42 சதவீதமாக இருந்தது, வங்கித் துறை பணிகளை, 43 சதவீதத்தினர் விரும்புகின்றனர். 2014ம் ஆண்டில், பட்டதாரிகள் மத்தியில் நுகர்பொருள் துறை வேலைவாய்ப்பு முதலிடத்தில் இருந்தாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், ‘இ- – காமர்ஸ்’ துறை மிகவும் ஈர்ப்புடையதாக அமைந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் நுகர்பொருள் தயாரிப்பு துறை முன்னிலை பெற்றுள்ளது. இந்த துறை, வரும் ஆண்டுகளில், இரட்டை இலக்க வளர்ச்சி காணும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|