பதிவு செய்த நாள்
28 மே2018
01:13
‘மியூச்சுவல் பண்ட்’ நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை மாற்றி அமைப்பது, மறு வகைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் பற்றி முதலீட்டாளர்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வகைப்படுத்துவது தொடர்பான நெறிமுறைகளை, சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. குறிப்பிட்ட ஒரு பிரிவில், ஒரு திட்டத்தை மட்டுமே நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் செபி தெரிவித்தது. இதற்கு உடன்படும் வகையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தங்கள் திட்டங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன.
புதிய வகைப்படுத்தல் நெறிமுறைக்கு பொருந்தும் வகையில் செய்யப்பட்டு வரும் இந்த மாற்றங்கள், முதலீட்டின் மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளன. திட்டங்களின் மாற்றத்திற்கு பின், அவை நிதி இலக்கு மற்றும் முதலீட்டு உத்திக்கு ஏற்றதாக தொடர்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள, நிறுவனங்கள் செய்து உள்ள மாற்றங்களை கவனிக்க வேண்டும்.
ஒரு சில நிறுவனங்கள், தங்கள் திட்டங்களில் பெயரளவிலான மாற்றத்தை மட்டுமே மேற்கொண்டு இருக்கின்றன. இதனால், அதிக தாக்கம் ஏற்படாது. சில நிறுவனங்கள், திட்டத்தின் அடிப்படை முதலீட்டு அம்சங்களில் மாற்றத்தை செய்திருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கலாம்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளங்களை அணுகி, இந்த மாற்றங்கள் குறித்து அறியலாம். மாற்றங்கள் தொடர்பான தகவல்கள், இணையதளங்களில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|