பதிவு செய்த நாள்
29 மே2018
03:42
புதுடில்லி : திவால் நடவடிக்கை தொடர்பான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில், இன்று விசாணைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் கம்யூ., நிறுவனம், தொலைதொடர்பு சேவை வழங்கிய வகையில், சுவீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 1,150 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.
இத்தொகைக்காக, ரிலையன்ஸ் கம்யூ., மற்றும் அதன் இரு துணை நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கை கோரி, எரிக்சன், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதை ஏற்று, மூன்று நிறுவனங்கள் மீது, கடன் தீர்வு நடைமுறையை துவக்கவும், இடைக்கால தீர்வு நடவடிக்கைக்கு வல்லுனரை நியமிக்கவும், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதற்கு தடை விதிக்க கோரி, ரிலையன்ஸ் கம்யூ., நிறுவனம், தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், நேற்று மனு தாக்கல் செய்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற, ரிலையன்ஸ் கம்யூ., கோரிக்கையை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|