பதிவு செய்த நாள்
29 மே2018
03:43
புதுடில்லி : இந்தாண்டு, வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, மின்னணு வணிகம், சில்லரை விற்பனை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில், 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்து, ஐ.எஸ்.எப்., எனப்படும், இந்திய பணியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில், 81 சதவீத வேலைவாய்ப்பை வழங்கும், அமைப்பு சார்ந்த, 15 துறைகளில், தொழில், வாகனம், சில்லரை விற்பனை, மின்னணு வர்த்தகம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவை முன்னணியில் உள்ளன.
‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும், பணிகளின் தன்மையை மாற்றி வருகின்றன. இதன் காரணமாக, விருப்பமான நேரத்தில் பணியாற்றுவோரின் பங்கு அதிகரித்து வருகிறது.
வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளில், 12 சதவீதம் பேர், விருப்பமான நேரத்தில் பணியாற்றுகின்றனர். இது, அடிப்படை கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் எரிசக்தி துறைகளில், 11 சதவீதம்; சில்லரை விற்பனை மற்றும் மின்னணு வணிகத்தில், 5 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.
அலுவலக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால், 5 சதவீத இளைஞர்கள் மட்டுமே, அன்றாட பணிக்கு தேர்வு செய்யப் படுகின்றனர். பணிக்கு தேவையான திறன் இல்லாததே இதற்கு காரணம்.
இதனால், உற்பத்தியும் மிகக் குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லை என்பதை விட, அத்தகைய வேலைவாய்ப்பு களுக்கு ஏற்ற திறன்களை வளர்க்க, பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தினால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இந்தாண்டு, வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, சில்லரை விற்பனை உள்ளிட்ட துறைகளில், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும், 2021ல், அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை துறையில், 12.62 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அடுத்து, கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை, 1.37 லட்சம்; வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, 52,500; வாகன துறையில், 43,060 வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|