பதிவு செய்த நாள்
02 ஜூன்2018
00:23
புதுடில்லி:கடந்த மே மாதம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலான வசூல், 94,016 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.இது, ஏப்ரலில், 1,03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மே மாதம், 62.47 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்துள்ளன. மொத்தம், 94,016 கோடி ரூபாய்வசூலானது.இதில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15,866 கோடி; மாநில அரசுகளின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 21,691 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த வரி மூலம், 49,120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இத்துடன், இழப்பீட்டு வரியாக, 7,339 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, மே மாதம், ஜி.எஸ்.டி., வசூல் குறைவாக உள்ளது. இருந்தபோதிலும், 2017- – 18ம் நிதியாண்டில், மாதம் சராசரியாக வசூலிக்கப்பட்ட, 89,885 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், ஜூலை – மார்ச் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., இழப்பீடாக, மாநிலங்களுக்கு, 47,844 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|