பதிவு செய்த நாள்
03 ஜூன்2018
00:21
ஈரோடு:‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தில், ஈரோட்டில் உள்ள இரண்டு விசைத்தறி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், ‘நுால் வங்கி’ அமைக்க, கடன் வழங்க, அரசு தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டம் மூலம், சிறு, குறு, நடுத்தர தொழிலை நவீனமாக்க, கடனுதவி, மானியம் பெறலாம்.
பரிந்துரை
இதன்படி, நுால் வங்கி அமைப்பதற்காக, ஈரோடு பகுதியிலுள்ள, ஏழுமலையான் விசைத்தறி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு, 1 கோடி ரூபாயும், வள்ளலார் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்துக்கு, 50 லட்சம் ரூபாயும், கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட வரைவு, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும், பிற திட்டங்களில், ஈரோடு பகுதியில் உள்ள, 350 கைத்தறி துணி உற்பத்தி செய்யும் தறிகளை நவீனமாக்கவும், 3,350 உறுப்பினர்கள், தங்கள் தறியில்,‘லிப்டிங் ஜக்கார்டு’ அமைப்பு ஏற்படுத்தவும் உள்ளனர்.
இதற்கான தொகையில், 30 சதவீதத்தை, விசைத்தறியாளர் செலுத்த வேண்டும். மீதமுள்ள, 70 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும்.தவிர, சூரிய ஒளி மூலம், விளக்குகள் இயக்கும் வகையில், சோலார் பேனல் அமைக்கவும், பல விசைத்தறியாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மானியம்
இதுபற்றி, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர், பிச்சைமுத்து கூறுகையில், ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தில், பல்வேறு கடன், மானியங்கள் பெற வாய்ப்புள்ளது.‘‘கடனை திரும்ப செலுத்தும் வாய்ப்புள்ள சங்கங்களுக்கு, நுால் வங்கி அமைக்க பரிந்துரை செய்துள்ளோம். பிற சங்கங்கள், தேவையின் அடிப்படையில் தொடர்பு கொண்டால், பரிந்துரை செய்வோம்,’’ என்றார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|