பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
01:32
வீட்டுக்கடன் துறையில் அதிக வளர்ச்சி காத்திருப்பதாகவும், இத்துறையின் வாயிலாக வழங்கப்படும் கடன் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:வங்கிகளின் வீட்டுக்கடன் வளர்ச்சி விகிதம் அடுத்த ஐந்தாண்டுகளில், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களின் வளர்ச்சியை மிஞ்சும் வாய்ப்பிருக்கிறது. இத்துறையில் முன்னணி நான்கு வீட்டுக்கடன் வசதி நிறுவனங்கள் 79 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளன. எனினும் இவற்றின் பங்கு அண்மை காலத்தில் லேசாக சரிந்துள்ளது.
வீட்டுக்கடன் வசதி நிறுவனங்கள் பிரிவில் புதிய நிறுவனங்கள் வருகையால் மொத்த நிறுவனங்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை குறைந்த விலை பிரிவு வீடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|