பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
01:37
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பெயரில் வங்கி கணக்கை துவக்குவதன் மூலம் அவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி தருவதோடு, நிதி விஷயங்களின் அடிப்படைகளையும் கற்றுத் தரலாம்.
குழந்தைகள் பெயரில் துவக்கப்படும் வங்கி சேமிப்பு கணக்கு மைனர் அக்கவுண்ட் என குறிப்பிடப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்களுக்காக இந்த கணக்கை துவக்கலாம்.பொதுவாக, இயற்கையான பாதுகாவலர் (பெற்றோர்) குழந்தைகள் சார்பில் அல்லது அவர்களுடன் இணைந்து சேமிப்புக் கணக்கை துவக்க லாம். சட்ட பூர்வமான பாதுகாவலரும் மைனர் பெயரில் கணக்கு துவக்கலாம்.
இந்த வகை கணக்கை துவக்குவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை சமர்பிக்க வேண்டும். குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் கே.ஒய்.சி சான்றிதழ் உள்ளிட்டவை அளிக்கப்பட வேண்டும்.பத்து வயதுக்கு மேற்பட்டவர் எனில் அவர்களின் மாதிரி கையெழுத்தும் அளிக்கப்பட வேண்டும்.
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எனில், பாதுகாவலர் தான் கணக்கை இயக்க வேண்டும். பத்துவயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களே சொந்தமாக கணக்கை இயக்கலாம்.தினமும் செய்யக்கூடிய பரிவர்த்தனை வரம்புகள் உள்ளன. இவற்றோடு பெற்றோர் கூடுதல் வரம்புகளை ஏற்படுத்திக் கொண்டு, கணக்கை கண்காணிக்கலாம். குழந்தைகளுக்கு 18 வயது ஆன பிறகு இந்த கணக்கு வழக்கமான கணக்காக கருதப்படும். அதன் பிறகு பாதுகாவலரால் கணக்கை இயக்க முடியாது. கணக்குதாரர் மேஜராக மாறியதற்கான படிவம் கே.ஒய்.சி சான்றிதழுடன் அளிக்கப்பட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|