தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
குழந்­தைகள் பெயரில் வங்கி கணக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
01:37

பெற்­றோர்கள் தங்கள் குழந்­தைகள் பெயரில் வங்கி கணக்கை துவக்­கு­வதன் மூலம் அவர்­க­ளுக்கு சேமிப்பு பழக்­கத்தை ஏற்­ப­டுத்தி தரு­வ­தோடு, நிதி விஷ­யங்­களின் அடிப்­படை­க­ளையும் கற்­றுத்­ த­ரலாம்.
குழந்­தைகள் பெயரில் துவக்­கப்­படும் வங்கி சேமிப்பு கணக்கு மைனர் அக்­கவுண்ட் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. 18 வய­துக்கு குறை­வா­ன­வர்­க­ளுக்­காக இந்த கணக்கை துவக்கலாம்.பொது­வாக, இயற்­கை­யான பாது­கா­வலர் (பெற்றோர்) குழந்­தைகள் சார்பில் அல்­லது அவர்­க­ளுடன் இணைந்து சேமிப்புக் கணக்கை துவக்­க லாம். சட்ட பூர்­வ­மான பாது­கா­வ­லரும் மைனர் பெயரில் கணக்கு துவக்­கலாம்.
இந்த வகை கணக்கை துவக்­கு­வ­தற்­கான படி­வத்தை பூர்த்தி செய்து, குழந்­தை­களின் பெயர் உள்­ளிட்ட விப­ரங்­களை சமர்­பிக்க வேண்டும். குழந்­தை­களின் பிறப்பு சான்­றிதழ், ஆதார் எண், பெற்­றோரின் கே.ஒய்.சி சான்­றிதழ் உள்­ளிட்­டவை அளிக்­கப்­பட வேண்டும்.பத்து வய­துக்கு மேற்­பட்டவர் எனில் அவர்­களின் மாதிரி கையெ­ழுத்தும் அளிக்­கப்­பட வேண்டும்.

பத்து வய­துக்கு உட்­பட்ட குழந்­தைகள் எனில், பாது­காவலர் தான் கணக்கை இயக்க வேண்டும். பத்துவய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் தாங்­களே சொந்­த­மாக கணக்கை இயக்கலாம்.தினமும் செய்­யக்­கூ­டிய பரி­வர்த்­தனை வரம்­புகள் உள்ளன. இவற்­றோடு பெற்றோர் கூடுதல் வரம்­பு­களை ஏற்­ப­டுத்­திக் ­கொண்டு, கணக்கை கண்­கா­ணிக்­கலாம். குழந்­தை­க­ளுக்கு 18 வயது ஆன பிறகு இந்த கணக்கு வழக்­க­மான கணக்­காக கரு­தப்­படும். அதன் பிறகு பாது­கா­வ­லரால் கணக்கை இயக்க முடி­யாது. கணக்­கு­தாரர் மேஜ­ராக மாறி­ய­தற்­கான படிவம் கே.ஒய்.சி சான்­றி­த­ழுடன் அளிக்­கப்­பட வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)