பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
01:43
பரவலாக நாடப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக திகழும், நிரந்தர வைப்பு நிதி முதலீடு, நிதி இலக்கு சார்ந்ததாக இருப்பது அவசியம்.
முதலீடுகள் தரும் பலன் மிகவும் முக்கியம் என்றாலும், சிறந்த முதலீட்டை தேர்வு செய்ய பலனை மட்டும் கருத்தில் கொண்டால் போதாது. முதலீடு என்பது ஒருவர் நிதி இலக்குகளுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். நிதி இலக்குகளை நிறைவேற்றக்கூடிய வகையில் முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்கும் போது ஒருவர் தனது நிதி இலக்குகளையும் மனதில் கொள்ள வேண்டும். பரவலாக நாடப்படும் முதலீடு வாய்ப்புகளில் ஒன்றான பிக்சட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதிகளுக்கும் இது பொருந்தும்.ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அதிகம் நாடும் முதலீடு வாய்ப்பாக விளங்கும் வைப்பு நிதி முதலீட்டை தீர்மானிக்கும் போது அதற்கேற்ற இலக்குகளையும் கொண்டிருக்க வேண்டும்.பாதுகாப்பான முதலீடு
வைப்பு நிதி முதலீட்டு வாய்ப்பை வங்கிகள் மற்றும் அனுமதிக்கப் பட்ட நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. பொதுவாக இவை மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. இவை உத்திரவாதமான பலன் அளிக்கின்றன.இவற்றை, இடையே விலக்கி கொள்வதும் சாத்தியம். தற்போது வங்கிகள் பல்வேறு கால அளவிற்கு ஏற்ப 7 சதவீத வட்டி அளிக்கின்றன. வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயரலாம் என கருதப்படுகிறது. வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கு ஒரு லட்சம் வரை காப்பீடு பாதுகாப்பு உண்டு.
வைப்பு நிதி உத்திரவாதமான பலனை அளித்தாலும், இவற்றுக்கு டி.டீ.எஸ் வரி பொருந்தும். வருமான வரி வரம்ப்பிற்கு ஏற்ப இதன் பலனுக்கு வரி விதிப்புக்கு உட்படும். மேலும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டால், வைப்பு நிதி பலன் அதிகம் இருக்காது என்ற கருத்தும் இருக்கிறது. எனினும், நிலையான மாத வருமானம் நாடுபவர்கள் உள்ளிட்ட பலருக்கு இவை ஏற்றதாக அமைகிறது.
மேலும் ஒருவரது முதலீட்டு தேர்வில் வைப்பு நிதியும் இடம் பெற்றிருப்பது அவசியம் என்று கருதப்படுகிறது. வயதிற்கேற்ப இந்த விகிதம் அதிகரிக்க வேண்டும். வைப்பு நிதி முதலீட்டை நாடும் போது, அதற்கான நிதி இலக்கையும் மனதில் கொள்வது அவசியம். இவை பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமானவை என கருதப்படுகிறது.
அதாவது ஒன்று முதல் மூன்றுஆண்டுகள் வரையாக இலக்கு களுக்கு இவற்றை நாடலாம்.நிதி இலக்குகள்சேமிப்பது மற்றும் அசலின் பாதுகாப்பு முக்கியமாக இருக்கும் சூழலில் வைப்பு நிதி பொருத்தமாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட கால இலக்குகளை இவற்றை நாடுவது சரியாக இருக்காது என்றும் நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். வைப்பு நிதி அளிக்க கூடிய பலன் நீண்ட கால இலக்குகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது.
எமர்ஜென்சி பண்ட் எனப்படும் அவசர கால நிதிக்கான தொகையை போட்டு வைக்கவும் வைப்பு நிதியை நாடலாம். ஆனால், உபரித்தொகையை வைப்பு நிதியில் போட்டு வைப்பது எதிர்பார்த்த பலனை அளிக்க வாய்ப்பில்லை. ரிஸ்க் தன்மைக்கேற்ப லிக்விட் பண்ட் போன்றவற்றை நாடுவதே சரியாக இருக்கும்.எனினும் வயதானவர்களை பொருத்தவரை வைப்பு நிதி ஏற்றதாக இருக்கும். வயதானவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பாதுகாப்பு மற்றும் நிலையான பலனை எதிர்பார்ப்பதால் வங்கி வைப்பு நிதி பொருத்தமான வாய்ப்பாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|