தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
01:48

கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தொடர் உயர்வுக்கு பின், கடந்த வாரத்தில் சரிவில் முடிவடைந்தது. மேலும், மே மாத அளவிலும் சரிவில் முடிவடைந்தது. உலகின் முதல் மற்றும் இரண்டாம் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியா, ரஷ்யா ஆகியவற்றின் அமைச்சகங்கள், 'முந்தைய வாரத்தில் நிலவி வரும் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் குறைந்து வரும் இருப்பு அளவை சீர் செய்ய உற்பத்தி அதிகரிக்கப்படும்' என, கூட்டாக அறிவித்தன. அறிவித்த நாள் முதல், தொடர்ந்து விலை சரிந்து வருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக, 'ஒபெக்' மற்றும்'நான் ஒபெக்' நாடுகள் ஒருங்கிணைந்து, தினசரி, 1.8 மில்லியன் பேரல் உற்பத்தியை குறைத்து, அதை சரிவர அமல்படுத்த, மேற்பார்வை குழுவையும் அமைத்து அமல்படுத்தி வந்தன. இதனால், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டது. தற்போது, இந்த நாடுகளின் அறிவிப்பால், சந்தையில் வரத்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விலை சரிவு நிகழ்ந்தது.
கடந்த இரு வாரத்தில் மட்டும், ஒரு பேரலுக்கு, 7.31 டாலர் சரிந்து அதாவது, 72.83 டாலரில் இருந்து, 65.57 டாலர் வரை சரிந்தது. ஆறு வார உயர்வு, இந்த சரிவில் ஈடானது. மேலும், பெருகி வரும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தியும் விலைக்கு பாதகமாக அமைந்தது. இ.ஐ.ஏ., நிறுவனத்தின் கணக்குப்படி, கடந்த வார உற்பத்தியானது, 10.8 மில்லியன் பேரல் ஆகும். இது, இரண்டாம் உற்பத்தி நாடான ரஷ்யாவுக்கு தோராய சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை கடந்த வாரம் சரிந்து, வியாபாரம் நடந்து முடிவுற்றது. அமெரிக்க நாணய குறியீடான டாலர் இண்டெக்ஸ் மதிப்பு உயர்ந்தது. அமெரிக்கா - வட கொரியா இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சு, மீண்டும் ஜூன், 12ம் தேதி துவங்க உள்ளது. இதில் முன்னேற்றம் காணப்படும் எனில், நிலவி வரும் அசாதாரண சூழல் விலகும் என்ற கண்ணோட்டத்திலும், வியாபாரிகளின் லாபம் எடுத்தல் காரணமாகவும், விலை சரிவு நேர்ந்தது.
இந்த ஆண்டின் உச்ச விலையாக, ஒரு அவுன்ஸ், 1,365 அமெரிக்க டாலர் என ஏப்ரலில் இருந்தது. தற்போது, 78 டாலர் குறைந்து, 1,287 டாலர் வரை வர்த்தகமாகியது. இது, நடப்பு ஆண்டின் சரிவான போக்கை உணர்த்துகிறது.
இருப்பினும், டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிபத்திலும், உள்நாட்டு ஆபரண சந்தையிலும் சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது, விலை சரிவு குறைவாக காணப்பட்டது.
மேலை நாடுகளில், நீண்ட கால அரசு கடன் மற்றும் கருவூல பத்திரங்களின் ஆதாயம் பெருகி வரும் சூழல் நிலவுகிறது, இது, தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் குறைய காரணமாகியது.மேலும், எல்லா மாதமும், முதல் வெள்ளியன்று, அமெரிக்காவில், விவசாயம் சாரா அரசு துறைகளில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை விபரம் வெளிவரும். இதில், கடந்த வெள்ளியன்று எதிர்பார்ப்பான, 1,88,000 பேர் என்பதை விட அதிகரித்து, 2,23,000 நபர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். இது, நாணயத்தின் மதிப்பு உயர காரணமானது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்தது. இந்த வாரமும் சரிவு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பு
செம்பு விலை, கடந்த நான்கு வாரங்களாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் மற்றும் அமெரிக்கா இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது ஆகியவை காரணமாக இறக்குமதி குறைந்தது.
இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அலுமினியம் விலை, 5 ஆண்டு உச்சத்தை எட்டியது. அதாவது, 1 கிலோ, 180 ரூபாய் வரை அதிகரித்தது. இதனால், அனைத்து தொழிற்சாலை கனிமங்களும் விலையேற்றம் கண்டன.செம்பு மற்றும் அலுமினிய உலோகங்கள் எளிதில் மின் கடத்தும் திறன் கொண்டவை. இதனால், இவை இரண்டும் மின்சார உபகரணங்கள், கேபிள்கள் ஆகியவை தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், வரும் காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற கோணத்திலும், செம்பு விலை உயர்ந்து வருகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)