பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:41
புதுடில்லி:தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைவர், எம்.கே.சர்மாவின் பதவிக் காலம், வரும், 30ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து, புதிய தலைவரை தேடும் பணியில், ஐ.சி.ஐ.சி.ஐ., ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழுவில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ, தலைவரை தேர்வு செய்யலாம். எனினும், இயக்குனர் குழுவில் உள்ள, எம்.டி.மல்லையா, தலைவராக தேர்வு செய்ய கூடுதல் வாய்ப்பு உள்ளது.
மல்லையா, பேங்க் ஆப் பரோடாவின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர். அவர், மே, 29 அன்று தான், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தனி இயக்குனராக பொறுப்பேற்றார்.தனி இயக்குனர்களாக, உதய் சித்தாலே, திலீப் சோக்சி, நீலம் தவான், எல்.ஐ.சி., தலைவர், வி.கே.சர்மா, அரசு பிரதிநிதியான லோக் ரஞ்சன் ஆகியோரும் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில், தன் குடும்பத்தினருக்கு சலுகை பெற்றது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம், அதன் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது, தனி விசாரணையை துவக்கியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|