பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:50
புதுடில்லி:மத்திய அரசு, மேலும் நான்கு வங்கிகளை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு, ஏப்., 1ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.இதேபோல, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., பேங்க், ஓரியண்டல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளையும் ஒன்றிணைப்பது குறித்து, நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இந்த நான்கு வங்கிகளும், கடந்த நிதியாண்டில், 21 ஆயிரத்து, 646 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.இவற்றை ஒன்றிணைத்து உருவாகும் வங்கி, பொதுத் துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை அடுத்து, இரண்டாவது இடத்தை பெறும்.வாராக் கடன் பிரச்னை காரணமாக, பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வங்கித் துறையின் வாராக் கடன், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. இதில், பொதுத் துறை வங்கிகளின் பங்கு மட்டும், 8.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மத்திய அரசு, வங்கி இணைப்பு நடவடிக்கை மூலம், சர்வதேச தரத்தில் நான்கு அல்லது ஐந்து பெரிய வங்கிகளை உருவாக்க திட்டமிட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|