பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:51
சென்னை:ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், ஜி.எஸ்.டி.,யுடன் கூடிய, ‘சப்ளை’ மற்றும், ‘லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்’ பயிற்சி, 14ம் தேதி துவங்குகிறது.
தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறது.சென்னை, அம்பத்துார் மகாகவி பாரதியார் நகர், சரஸ்வதி வித்யாலயா பள்ளியில், வரும், 14ம் தேதி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், ஜி.எஸ்.டி.,யுடன் கூடிய சப்ளை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் பயிற்சி தரப்படுகிறது.
இத்துடன் நகை மதிப்பியல், மார்க்கெட்டிங் துறையிலும் பயிற்சி தரப்பட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும், சுயதொழில் செய்வதற்கும், பயிற்சி மையம் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.பயிற்சிக்கான போக்குவரத்து செலவை, தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. குறுகிய கால இந்த இலவச பயிற்சியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டம் படித்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.விண்ணப்பம் மற்றும் ஏனைய விபரங்களுக்கு, 9869041169, 7299955904, 7299955906 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இணையதள முகவரி: mangalyantwcs@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|